Skip to main content

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.எல்.ஏ.க்கள்! வெள்ளப் பாதிப்பு முகாமில் சுவாரசியம்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

MLAs put an end to the rumours! Interesting in the flood affected camp!

 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடந்த மூன்று தினங்களாக சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியாக வங்கக்கடலில் கலந்து வருகிறது. சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் ஆற்றின் இரு கரையோர பகுதியையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. கரையோர கிராமங்களான நாதல்படுகை கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் உள்ள மக்களை நாதல்படுகைக்கு அருகே உள்ள அனுமந்தபுரம் அரசுப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் அவர்களுக்கு வேண்டிய உணவு அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகிறது. இன்று மூன்றாவது நாளாக வெள்ளப் பாதிப்புகளைப் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகனும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வமும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்தனர். முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு சமைத்து வரும் உணவின் தரம், சுவை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒரே தட்டில் ஒன்றாக உணவினை சாப்பிட்டு உணவின் தரத்தைச் சோதனை செய்தனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு நெகிழ்ந்தனர்.

 

"திமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏவுமான நிவேதா முருகனுக்கும், சீர்காழி திமுக எம்.எல்.ஏ  பன்னீர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது எனப் பரவலாக இருந்த பேச்சுக்கு, அப்படி இல்லை என்பதற்கு ஒரே தட்டில் உணவு உண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்" என்கிறார்கள் திமுகவினரே. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்களை விவசாயம் செய்யவிடுங்கள்’ - போராடும் பொதுமக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The public protest against to be set up power plant in mayiladuthurai

சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் பவர் பிளான்ட் அமைக்கப்போவதை கண்டித்து போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்களிடம் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மெகா கிரைடு வோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட், தங்களது கிராமத்தில் அமைந்தால் தங்களின் விவசாயமும், வாழ்வாதாரமும் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரத்தின் வீரியம் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாக உள்ளது. மேலும், பவர் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும், மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகு, பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை, தீமைகளை கிராம பொதுமக்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும்” என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

The public protest against to be set up power plant in mayiladuthurai

அதன் பின்னர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பவர் பிளான்ட் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று, பிறகு கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

சீர்காழியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் வெடிக்க வைத்து அழிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Detonation of mysterious object washed ashore in Sirkhazi

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பாதுகாப்புடன் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்ஞைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றனர் போலீசார்.

Detonation of mysterious object washed ashore in Sirkhazi

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் அந்த கருவியானது வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதனுள் அந்த கருவியை வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக போலீசாரும் இருந்தனர்.