Skip to main content

மு.க. ஸ்டாலின் - மம்தா பானர்ஜி விரைவில் சந்திப்பு!

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

மநவ

 

தமிழ்நாட்டிற்கு வரவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளார்.

 

தமிழகத்திற்கு வரும் 2ம் தேதி வரவுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்  இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர் அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்ல உள்ளார். தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தாவின் '10 மணி அறிவிப்பு' - பதறிய பாஜக

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
BJP criticizes Mamata's '10 o'clock announcement'

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், 'ஏப்ரல், 2024 முதல், எங்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக  ஒவ்வொரு மாதமும் ரூ.750, மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அரசியல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அதனை திசைதிருப்ப மம்தா மேற்கொண்ட நூதன யுக்தி என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Next Story

விட்டுக்கொடுக்காத மம்தா பானர்ஜி; நம்பிக்கையுடன் இருக்கும் காங்கிரஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Mamata Banerjee who never gave up and  A confident Congress for constituency alottment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. . இதில், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கூறியதாகவும், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொள்ளவில்லை என்வும் கூறப்பட்டது. அதனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததாக கூறப்பட்டது.  

இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியது. மேலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் எம்.பியும், மூத்த தலைவருமான டெரக் ஓ பிரெயின் கூறியுள்ளார். இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (24-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும், இந்திய கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதாகவும், பாஜகவை தோற்கடிப்பதே மிகப்பெரிய நோக்கம் என்றும் கூறியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, ஆனால் நாங்கள் மம்தா பானர்ஜியை மதிக்கிறோம்” என்று கூறினார்.