Skip to main content

காணாமல் போன முதியவர் எலும்புக்கூடாக கண்டெடுப்பு!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Missing old man found as a skeleton

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் கண்ணன் (85). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக இவர் அவ்வப்போது வீட்டை விட்டு மனம் போன போக்கில் செல்வது உண்டு. குடும்பத்தினர் அவ்வப்போது தேடி அழைத்து வந்து வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பெரியவர் கண்ணன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த அவரது குடும்பத்தினர் இறுதியில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியவர் கண்ணனைத் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ராதாபுரம் அருகே உள்ள விண்ணான் என்ற ஏரியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீசார் பெரியவர் கண்ணனின் மகன்கள் வீரப்பன், ராமஜெயம் ஆகியோரை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த எலும்புக்கூடுகளின் அருகே பெரியவர் கண்ணன் அணிந்திருந்த டவுசர் கிடந்துள்ளது.

 

இதையடுத்து எலும்பு கூடாக கிடந்தது மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த பெரியவர் கண்ணன் தான் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதோடு தடய அறிவியல் துறை இணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிக் கிடந்த எலும்பு கூடுகளை முழுமையாக சேகரித்து தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.