Skip to main content

அமைச்சரின் உதவியாளர் விவகாரம்- வாபஸ் பெறப்பட்ட புகார் மனு!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Minister's Aide affair- Complaint withdrawn!

 

“என்ன இருந்தாலும் அந்தத் தலைமைக் காவலரை, அந்த அமைச்சரின் உதவியாளர் பொது இடத்தில் வைத்து அடித்திருக்கக் கூடாது. காவல்நிலையம் வரையிலும் புகாராகி, அமைச்சரின் உதவியாளர் மன்னிப்பு கேட்டு புகார் திரும்பப் பெறப்பட்டாலும் கூட, அந்தத் தலைமைக் காவலருக்கு அச்சம்பவம் நெருடலாகத்தான் இருந்திருக்கும்..” 


-திருச்செந்தூர் வாசகர் ஒருவர் அளித்த தகவல் இது!


என்ன விவகாரம்?

 

திருச்செந்தூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார், முத்துக்குமார். அந்த ஊரில் உள்ள ஒரு ஓட்டல் சந்திப்பில், அரசு பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றது. காரை நிறுத்தியிருந்த தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் டிரைவரிடம், ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமார் ‘கொஞ்சம் காரை எடுங்க..’ என்று தெரிவித்திருக்கிறார். டிரைவரோ ‘இது அமைச்சரோட கார்..’ என்று மரியாதைக் குறைவாகப் பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் இச்சம்பவத்தைக் கண்டு சத்தம் போட்டார்கள். அதனைத் தொடர்ந்து டிரைவர் காரை நகர்த்தியுள்ளார். 

 

அடுத்த பத்து நிமிடங்களில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாவும் மேலும் இருவரும் அந்த இடத்துக்கு வந்தனர். வந்த வேகத்தில் நாகரீகமற்ற வார்த்தையால் திட்டிய கிருபா, உடன் வந்த இருவர் ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமாரின் கையைப் பிடித்துக்கொள்ள, கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். கிருபா தாக்கியதில், முத்துக்குமார் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கழன்று கீழே விழுந்திருக்கிறது. அதன்பிறகு அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட முத்துக்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.

 

புகாரான பிறகு, ‘தெரியாம நடந்திருச்சு..’ என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ஆய்வாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு புகார் முத்துக்குமாரால் வாபஸ் பெறப்பட்டது. திருச்செந்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை நாம் தொடர்புகொண்டபோது “ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. அடிச்சவங்களே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு நான் என்ன பண்ணமுடியும்? அதான்.. புகாரை திரும்ப வாங்கிட்டேன்” என்றார் உடைந்த குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.