Skip to main content

சேலம் அரசு மருத்துவமனையில் வருகிறது புற்றுநோய் சிகிச்சை மையம்!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

சேலம் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் செலவில் விரைவில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

 

Minister Vijayabaskar - Cancer Center - Salem Government Hospital

 



தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வருடன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். புதன்கிழமை (மார்ச் 4) இரவு, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு சிகிச்சை பிரிவுக்குச் சென்ற அவர், பிரசவ விவரங்கள், சிகிச்சைக்காக வந்து செல்வோரின் பதிவேடுகளை பார்வையிட்டார். அதையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள சிறப்புப்பிரிவை பார்வையிட்டார். அங்குள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் பிரிவையும் பார்வையிட்டார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "சேலம் அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 35 பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்புகள் நிகழாவண்ணம் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இம்மருத்துவமனையில், 20 கோடி ரூபாயில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது, 1.60 கோடி ரூபாய் மதிப்பில் நவீன சி.டி. ஸ்கேன் உபகரணம் வழங்கப்பட்டு உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதி இல்லை என்று பலர் கூறினர். ஆனால், இதுவரை இங்கு 4 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர். அதற்குத் தேவையான வசதிகள் மேலும் செய்து கொடுக்கப்படும்.

 

 

இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. தேவையான அளவு மருந்து, மாத்திரை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் ஒரு குறும்படம் வெளியிட இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்" என தெரிவித்தார்.

ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.