Skip to main content

உலக சாதனை நிகழ்த்தப்போகும் அமைச்சர் உதயநிதி!

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதன்முறையாக உதயநிதி கலந்து கொள்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 117 ஏக்கர் நிலம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காததால், அந்த நிலங்கள் முழுவதுமே சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இத்தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சக்கரபாணி இத்தொகுதியை பசுமை தொகுதியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதி முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். அதோடு தொகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் ஊராட்சி மூலம் அகற்ற சொல்லியதுடன் மட்டுமல்லாமல் சீமைக்கருவேலம் இல்லாத ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அந்தந்த ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் உள்ள சீமைக்கருவேல முட்களை அகற்றும் பணிகளில் ஊராட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அப்பொழுதுதான் இடையகோட்டை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் சீமைக்கருவேலம் படர்ந்து இருப்பதை கண்டு, அதை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு, ஒரு பசுமை புரட்சியை உருவாக்க வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி முடிவு செய்து, அதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில்தான் கடந்த 2 மாதங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் ஆயிரக்கணக்கான பேரை வைத்து சுத்தம் செய்து அங்கங்கே  கை மிஷின்கள் மூலம் குழி எடுத்து அதை சீரமைப்பதற்காக தினசரி 3000க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டது. அது போல் அமைச்சரின் இந்த முயற்சிக்காக தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த கட்சி பொறுப்பாளர்களும் உள்ளாட்சி பொறுப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக களமிறங்கியும் பணிகளை செய்தனர். இதில் மா, வேம்பு, நாவல், இழுவை, அத்தி, புளி, தேக்கு உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நட உள்ளனர். இந்த மரக்கன்றுகளும் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருக்கும் நர்சரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகள் வனத்துறை மூலமாகவும் வாங்கப்பட்டிருக்கிறது.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

இப்படி வாங்கப்பட்ட 6 லட்சம் மரக்கன்றுகளைத் தான் 6 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேரை கொண்டு நடவு செய்து உலக கின்னஸ் சாதனை படைக்க போகிறார்கள். ஏற்கனவே 14 மணி நேரத்தில் பல பகுதிகளில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெளிநாட்டில் உலக சாதனை படைத் திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இப்படி ஒரே இடத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவது முதல் முறையாகும். அதனாலேயே அமைச்சர் சக்கரபாணியின் இந்த செயல் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. இந்த விழாவுக்காகத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி அழைப்பின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  23 ஆம் தேதி முதன்முதலில் கலந்து கொண்டு 6 லட்சத்து ஒன்றாவது மரக்கன்றை நட்டு உலக சாதனை படைக்க வருகிறார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் மிகப் பிரமாண்டமாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த கட்சிக்காரர்கள் 5 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி வழங்க இருக்கிறார். 

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாட்டில் நகரில் சில பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களில் கட்சிக்கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்ற இருக்கிறார். இந்த ஏற்பாடுகளை ஐ.பி.செந்தில்குமார் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். உதயநிதி அமைச்சரான பிறகு முதன்முறையாக திண்டுக்கல்லுக்கு வர இருப்பதால் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் இளைஞர் அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.