Skip to main content

2,410 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பயிற்சி வழிகாட்டு மையம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

 

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7,020 பேர் பங்கேற்றனர். முகாமில் 175 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளரைத் தேர்வு செய்தன. அதன் மூலம் மொத்தம் 2,410 பேருக்குப் பணி நியமன ஆணையை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

அதன்பின் வேலைவாய்ப்பு முகாமில் உணவு மற்றும் வழங்கல்  துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்களில் ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் சேர்த்து ஆக மொத்தம் 7 ஆயிரத்து 20 பேர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 2 ஆயிரத்து 410 பெயர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்கும் பணி இன்று முடியவில்லை. படிக்காதவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பணி கிடைக்க முயற்சி எடுக்கப்படும்.

 

பணியை விரும்பாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் பணி கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். அரசுப் பணியைத்தான் பெரும்பான்மையான இளைஞர்கள் விரும்புகின்றனர். அதற்காக ஒட்டன்சத்திரத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.போன்ற அகில இந்திய பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் வாரியம் நடத்தும். தொகுதி 1 முதல் அனைத்து பணிகளின் தேர்வுக்கான பயிற்சி மையமும் ஐ.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்திடும் மையமும் விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.

 

Minister Chakrabani issues appointment order to 2410 people

 

இதில், வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சரவணன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் பிரபாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஆர்.டி.ஒ. ஆனந்தி, தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.