Skip to main content

“கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Minister Chakarapani addressed press

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “திருவாரூர் மாவட்டத்தில் 58,721 பேர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுவரப்படுகிறது. எரிவாயு இணைப்புகள் இல்லாத 82,000 குடும்பங்களுக்கு எரிவாயு நிறுவன முகவர்கள் மூலம் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் இதுவரை 34,000 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 48,000 குடும்பங்களுக்கும் அந்தந்த பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடை பதிவேட்டில், எரிவாயு இணைப்பு இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களிடம் எரிவாயு இணைப்பு திட்டம் தொடர்பாக எடுத்துக்கூறி பயனாளிகள் பயன்பெறும் வகையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதமே அறுவடை காலம் துவங்கப்படவுள்ளதால் நெல்லிற்கான ஆதார விலையினை செப்டம்பர் மாதம் வழங்க முதல்வர் மத்திய அரசிடம் கேட்டதன் அடிப்படையில் இந்தாண்டு செப்டம்பர்-1 ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லிற்கு ஆதார விலை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும்.

 

நேரடி கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குற்றங்கள் அல்லது குறைபாடுகள் இருப்பின் அதனை விவசாயிகள் தெரிவிக்க, அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களின் தொடர்பு எண் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கொள்முதல் நிலையங்களில் மனுப்பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனித்தனியே இலவச தொலை பேசி எண்ணும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவர்களின் நெல்லினை பாதுகாப்பாக வைத்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான அளவு சாக்கு, சணல், தார் பாய்கள் கூடுதலாக இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடம் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேவையிருப்பின் விவசாயிகளிடம் காலம் தாழ்த்தாமல் தினந்தோறும் 2000 நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.