Skip to main content

எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Minister Anbil Mahesh started new campaign to make people educate

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கென்று துவங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சியைத் தரம் உயர்த்தி புதிய வடிவமைப்பில், தமிழ்நாடு முதல்வரின் பெயரை உலக அளவில் கொண்டுசேர்த்திருக்கிறார்.  

 

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வியறிவு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆடியோ, வீடியோ, அனிமேஷன் என்று மாணவர்கள் மிக எளிமையாக பாடத்திட்டங்களைப் புரிந்துகொள்ள செய்திருக்கும் பல திட்டங்கள் உலக அளவில் கல்வித் தொலைக்காட்சிக்கு ஒரு தனிப்பெரும் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. தன்னுடைய அடுத்த இலக்காக அன்பில் மகேஷ் கையிலெடுத்திருக்கும் புதிய முயற்சி, தமிழ்நாடு முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு 60 நாட்களில் எழுத்தறிவு புகட்டுவது.

 

தமிழ்நாடு முதல்வரின் ஒப்புதலோடு துவங்கிய இந்தத் திட்டத்தைத் திருச்சி மணிகண்டம் ஒன்றியத்தில் துவங்கிவைத்துள்ளார். மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், விழாவிற்கு வந்திருந்த மூதாட்டிகளை அவரருகில் அமரவைத்து, அவரே கைப்பலகையில், எழுதிக் காண்பித்து, “எழுத, படிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பளிக்கும், தைரியத்தை வளர்க்கும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் எம்.ஜி. ஆருக்கு மக்கள் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. குறிப்பாக வயதான மூதாட்டிகளிடம் அவர் காட்டிய அன்பும், ஆதரவும், பெரிய அளவில் இன்றும் பேசப்பட்டுவருகிறது. தற்போது எம்.ஜி.ஆரின் பாணியை அமைச்சர் அன்பில் மகேஷ் கையாள ஆரம்பித்திருக்கிறார்.

 

Minister Anbil Mahesh started new campaign to make people educate

 

கே.கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (65) என்ற பெண்மணி நூறு நாள் திட்டத்தில் வேலை செய்துவருகிறார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாத நிலையில், இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள ஆர்வமுடன் வந்திருந்த அவரைப் பார்த்து அமைச்சர், "உங்களுடைய ஆர்வம் எனக்கு வியப்பளிக்கிறது... தொடர்ந்து நீங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லி, அவரே கைப்பலகையை வாங்கி உங்களுடைய பெயர் அஞ்சலை. அதில் துவங்கும் தமிழின் முதல் எழுத்து ‘அ’ என்ற எழுத்தை முதலில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று எழுத கற்றுக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் அவருடைய முழுப் பெயரையும் எழுதும் அளவிற்கு கற்றுக்கொடுத்துவிட்டார். 

 

"இந்த திட்டத்தினை முறையாக செயல்படுத்தி, தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதே அதிகாரிகள், ஆசிரியர்களின் இலக்காய் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.