Skip to main content

கோயில் அர்ச்சகர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிதி வழங்கிய வேளாண்துறை அமைச்சர்..! 

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Minister of Agriculture who provided corona funds to temple priests

 

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் இதர பணியாளர்களுக்கு தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி ரூ 4000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமை தாங்கினார். வேளாண்மை உழவர் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கி திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டத்தில் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் 467 கோயில்களில் பணிபுரியும் 467 பணியாளர்களும், இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 59 கோயில்களில் பணிபுரியும் 74 பணியாளர்களும் என மொத்தம் 541 பேருக்கு இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ 4,000 வீதம் 21 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டது.

 

இதேபோல், சமூக நலத்துறையின் மூலம் மூன்றாம் பாலினத்தவர் நிவாரண உதவித் தொகை ரூ 2000 மற்றும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் அமைச்சர் வழங்கினார். இதில் தகுதியான மூன்றாம் பாலினத்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 353 அவர்களுக்கு தலா 2000 வீதம் 7 லட்சத்து 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

 

 

Minister of Agriculture who provided corona funds to temple priests

 

அதேபோல் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 வயதுக்குட்பட்ட கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டு தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, இந்து அறநிலை துறை மண்டல இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர்கள். சமூக  நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.