Skip to main content

பவானிசாகருக்கு நீர்வரத்து குறைந்தது

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Minimum water flow to Bhavanisagar

 

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.26 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை அணைக்கு 5,821 கன அடி நீர்வரத்து வந்தது. அணையிலிருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ் பவானியின் பவானி வாய்க்காலில் 5 கன அடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்