Skip to main content

சிதம்பரத்தில் அகில இந்திய ரயில் பயணிகள் நலக்குழு உறுப்பினர்கள் ஆய்வு!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Members of the All India Railway Passenger Welfare Committee inspect Chidambaram!

 

சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அன்று அகில இந்திய ரயில் பயணிகள் நலக்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையில் உறுப்பினர்கள் கே.ரவிச்சந்திரன், அபிஜித் தாஸ், பி.மதுசூதனா, ஜி.வி.மஞ்சுநாத், கைலாஷ் லஷ்மன் வர்மா,சுனில்ராம் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

 

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, மின்விசிறி ,காத்திருப்பு அறையில் போதுமான வசதிகள் டிக்கெட் வழங்கும் இடத்தில் என்ன வசதிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரயில் நிலைய நடைமேடையிலிருந்த ரயில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் கட்டணம் அதிகமாக உள்ளது என பயணிகள் கூறியதன் பேரில் ஆட்டோ கட்டணத்தை சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 

பயணிகள் நலக்குழுவினரிம் சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் சிதம்பரம் வழியாக கடலூர் வரை இயக்கவும் மற்றும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மைசூர் ரயில்களை மயிலாடுதுறையிலிருந்து கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என மனு அளித்து வலியுறுத்தினர்.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் முன்பதிவு இல்லா பயணிகள் வண்டிகள் குறைக்கப்பட்டுள்ளதையும், இங்கு முன்பதிவு இல்லா ஏற்கனவே சென்ற பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்வதாகவும் பயணிகள் நலக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.