Skip to main content

நெல்லையை உலுக்கிய மெகா கொள்ளை!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Mega robbery that rocked Nellai!

 

நெல்லை மாவட்டத்தையே திகிலும் பதற்றத்திலும் தள்ளியிருக்கிறது அந்த மெகா கொள்ளை.

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரில் அலி ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடை வைத்திருப்பவர்கள் மைதீன் பிச்சையும் (வயது 55), அவரது சகோதரர் அலியாரும் 20 ஆண்டுகளாக மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (11/04/2022) இரவு சுமார் 08.30 மணியளவில் நகைக்கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு நகைப்பையுடன் டூவீலரில் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார் மைதீன் பிச்சை. இவரை வேவு பார்த்த கும்பல் ஒன்று டூவீலரில் மைதீன்பிச்சையைப் பின்தொடர்ந்து சென்று திடீரென அரிவாளால் அவரை வெட்டியது. இதனால் மைதீன் பிச்சை நிலைகுலைந்து சரிந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த நகைப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர். 

Mega robbery that rocked Nellai!

மெயின் வீதியில் நடந்த இந்தச் சம்பவத்தையறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மைதீன் பிச்சையை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

 

அவரிடம் விசாரித்த போலீசாரிடம் அரை மயக்கத்திலிருந்த மைதீன் பிச்சை நகைப்பையில் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 75 ஆயிரம்  இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அலர்ட் ஆன போலீசார் மாவட்டம் முழுக்க உள்ள சோதனை சாவடிகளை உஷார்படுத்தியதுடன் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

 

கொள்ளை போனது 5 கிலோ தங்க நகைகள் என்பதால், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எஸ்.பி. சரவணன், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடை மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்தனர். 

Mega robbery that rocked Nellai!

வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் டூவீலரில் ஒருவன் மைதீன் பிச்சையை பின்தொடர்ந்து வந்ததும் மற்ற மூன்று பேர் மைதீன் பிச்சையைத் தாக்கி நகைப்பையைப் பறிக்கப் பதுங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் கொள்ளைக்கும்பலைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்திருக்கிறார் எஸ்.பி. சரவணன்.

 

ரொக்கம், 5 கிலோ நகை கொள்ளை போனதின் மொத்த மதிப்பு 2.51 கோடி என்கிறார்கள். தினமும் நகைக் கடையைப் பூட்டிவிட்டு நகைப் பையுடன் வீடு திரும்பும் மைதீன் பிச்சையை வேவுப் பார்த்து திட்டமிட்டு கொள்ளையை நடத்தியிருக்கிறது கும்பல் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். மேலும் அண்மையில் அவரது கடைக்கு வந்து போனவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர் தனிப்படையினர்.

 

இந்த மெகா நகை கொள்ளை சம்பவம் மாவட்டத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.