Skip to main content

ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம்; கள்ளச்சாராயம் அமோக விற்பனை 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Massive sale counterfeit liquor Kallakurichi district

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. சேலம், திருவண்ணாமலை, மாவட்டங்களை, ஒட்டி அமைந்துள்ளது இந்த மலைப்பகுதியை பயன்படுத்தி இங்கு கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வது என்பது பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தியாகும் கள்ளச்சாராயம் பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தப்படுவது ஒரு தொடர்கதையான சம்பவங்கள்.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அவ்வப்போது மலைப்பகுதிக்கு சென்று ரைடு நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழிப்பதும் கள்ளச்சாராயம் கடத்துபவர்களை கண்டறிந்து கைது செய்வதும், அதன் பின் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கள்ளச்சாராயத்தை மட்டும் இதுவரை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு உதாரணமாக சமீபத்தில் இந்த மலை கிராமம் ஒன்றில் கள்ளச்சாராய விற்பனை செய்ய ஊர் மக்கள் மத்தியில் ஏலம் விடும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் மலையை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் சாராய வியாபாரி ஒருவர் மது பிரியர்களை கவரும் வகையில் ஒரு லிட்டர் சாராயம் வாங்கினால், அரை லிட்டர் சாராயம் இலவசம் என்று அதிரடி ஆடி தள்ளுபடி சலுகை விலையில் அமோகமாக விற்பனை செய்துள்ளாராம் இந்த தகவல் வேகமாக பரவியதையடுத்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாட்டர் பாட்டில்கள் வாட்டர் கேன்கள் பாலிதீன் கவர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று போட்டி போட்டுக் கொண்டு கள்ளச்சாராயத்தை வாங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

போதையில் இளைஞர்கள் சீர் அழிவதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில் ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடி விலையில் துணிகளை விற்பனை செய்வது போன்று தள்ளுபடி விலையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என கள்ளச்சாராய விற்பனை பரபரப்பாக்கி உள்ளனர்.  இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மலை கிராம பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மலை வாழ் மக்கள் இளைஞர்கள் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற ஆந்திரா பகுதிகளுக்கு செம்மரம் வெட்டுவதற்கு கூலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையில் சிக்கி சீரழிகிறார்கள். இல்லையென்றால்  மலைப்பகுதியில் உள்ள மறைவிடங்களில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு அதை காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் கடத்தி விற்பனை செய்கிறார்கள். எனவே மலைவாழ் மக்கள் உழைத்து முன்னேற அவர்கள் பிழைப்புக்கு ஏற்ற வகையில் நியாயமான முறையில் தொழில் செய்து பிழைக்கும் வகையில் அரசு அவர்களுக்கு தொழில் சார்ந்த வருமானத்தை உருவாக்கித் தர வேண்டும் என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.