Skip to main content

நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு  திருமணம்; புகைப்படத்துடன் அம்பலம்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

சிதம்பரத்தில் கடந்த ஆண்டு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணமே நடைபெறவில்லை என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். மேலும் திருமணம் நடைபெறாதபோது தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாக கூறியிருந்தார்.

 

இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகநல அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை  தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிதம்பரத்திற்கு வருகை தந்தார். தீட்சிதர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்ட  தீட்சிதர் குழந்தைகள், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை. ஆனால், போலீசார் கட்டாயப்படுத்தியதால் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இதற்கு தீட்சிதர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டாண்டுக் காலமாக குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என சிதம்பரம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

nn

 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என்றும் இதனை விசாரணை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் குழந்தைகளை போலீசார் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளது முற்றிலும் தவறானது என்றும் எனவே தவறான கருத்தை கூறி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் தமிழக ஆளுநர் மீது குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் தீட்சிதர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என்பதையும் ஆளுநரின் பொய்யான குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் வகையில் குழந்தை திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்.எல்.சிக்காக நடராஜர் கோவிலில் ருத்ராபிஷேகமா? ஆர்.எஸ்.எஸ் விளக்கம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Rudrabhishekam at Nataraja temple: RSS organization denies

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்து நடத்திய மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை குறித்து  சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதற்கு மறுத்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் (NLCIL) 19.11.2023 அன்று சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ருத்ர அபிஷேக பூஜைக்கு ஏற்பாடு செய்ததாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்தது. இந்த பிரத்தியேகமான பூஜையானது, என்.எல்.சி இந்தியா லிமிடெட் மற்றும் பாரத தேசத்தின் ஒட்டு மொத்த நலன் மற்றும் வளர்ச்சிக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த பூஜை, முழுக்க என்எல்சிஐஎல் மற்றும் தேசிய நலன் கருதியதாகவும் இருந்ததால், என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள், என்.எல்.சி.ஐ.எல்-ன் மற்ற மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்குமாறு எங்கள் சேவா சங்கம் கேட்டுக் கொண்டிருந்ததின் பேரில் பங்கேற்றனர்.

 

nn

 

பூஜைக்கான முழுச் செலவையும் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் அமைப்பு மட்டுமே ஏற்றுக்கொண்டது என்று நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் மேலும் தெளிவுபடுத்துகிறது. இது போன்ற செய்திகளை, அடிப்படை உண்மைகளை சரிபார்க்காமல் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் என்.எல்.சி.ஐஎல் மீது தவறான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம், கடந்த 18 ஆண்டுகளாக ஆன்மீக மற்றும் சமுதாயம் சார்ந்த சேவைகளில் திறம்பட செயலாற்றி வருகிறது. வருடாந்திர மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் சமுதாய வளர்ச்சி சார்ந்த சேவைகளை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தர் மகராஜ் மற்றும் சுவாமி அசோக் மகராஜ் ஆகியோர் நல்லாசி மற்றும் முன்னிலையில் மஹா ஜப ருத்ர அபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

நடராஜர் கோவிலில் என்எல்சி சேர்மனிடம் பல லட்சங்களைப் பெற்று பூஜைகள்? நிர்வாகம் மறுப்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் கோவிலில் முக்கிய வழியாகக் கருதப்படும் கீழகோபுரத்தில் இருந்து செல்லும் 21 படிகட்டு வழியில் பக்தர்கள் செல்லும் பாதையை அடைத்து நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி குடும்பத்தினருக்கு, கோவில் தீட்சிதர்கள் பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ருத்ரா அபிஷேக பூஜைகள் செய்துள்ளனர். இது தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில் இது குறித்து கோவில் தீட்சிதர்களிடம் விசாரித்த போது இதுபோன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்தான். நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் போது இந்த இடங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறும். சமீபத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு இதே போன்று அதே இடத்தில் ருத்ரா அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இது ஒன்றும் விதிமீறல் அல்ல, பூஜைக்கு உரிய பணத்தை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தினால், யாருக்கு வேண்டுமானாலும் இதே இடத்தில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் என்று கூறுகின்றனர்.

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

இதுகுறித்து என்எல்சி மக்கள் தொடர்பு அலுவலர் காதர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைக் கூறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபிறகு மகிழ்ச்சி அடைகிறார்கள். சேர்மன் கோவிலில் நடைபெற்ற ருத்ர அபிஷேக பூஜையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆனால் இவர் பணம் எதுவும் செலவு செய்யவில்லை. வேறு அமைப்பு இதனைச் செய்திருந்தார்கள். இதில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 

இவர் சேர்மன் என்பதால் வெளியில் தெரிகிறது. அங்கு மற்றவர்களும் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். எனவே திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புவதாகக் கூறினார். இவர் ஆன்மீக பக்தர் திருப்பதி உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு கோவிலுக்குச் செல்வார். என்எல்சி நிர்வாக சேர்மன் என்பதால் சிறப்பு செய்வார்கள். இதனை பிடிக்காதவர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்றார்.