Skip to main content

''ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது'' - தமிழிசை கருத்து

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

N

 

ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''என்னிடம் கூட சில பில்ஸ் நிலுவையில் இருக்கிறது. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தாமதப்படுத்தவில்லை அது தொடர்பாக சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நடைமுறையில் இருந்து முற்றிலுமாக வேறு நடைமுறையை அவர்கள் கொண்டு வருகிறபொழுது இது மக்களுக்குப் பலன் தருகிறதா என்று பார்த்துவிட்டு கையெழுத்துப் போடலாம் என நினைப்பது தவறில்லை.

 

ஒரு ஆளுநருக்கு கையெழுத்திட உரிமை இருப்பதைப் போலவே நாம் சரியான நிலையில் கையெழுத்துப் போடுகிறோமா, மக்களுக்குப் பலன் தருகின்ற ஒரு சட்டத்தில் கையெழுத்துப் போடுகிறோமா என்பதையும் உறுதி செய்ய ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இதைத் தாமதம் என்று எடுத்துக் கொள்வதை விட அதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக ஆளுநர் உரை எனக்கு மறுக்கப்பட்ட பொழுது கூட அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்வதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது, மக்களுக்கு அது பயன்படாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக உடனே நான் கையெழுத்திட்டேன்.

 

எனவே மக்களைச் சார்ந்துதான் என்னைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது புரியாமல் இங்கே சில பேர் விமர்சனம் செய்கிறார்கள் என்பதுதான் எனது கருத்து. மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். புதுச்சேரியில் கூட மக்களைச் சந்திப்பதை அன்பிற்குரிய அண்ணன் நாராயணசாமி விமர்சிக்கிறார். ஆனால் ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது. பஞ்சாயத்தில் பணியாற்றினாலும் சரி, ஆளுநர் மாளிகையில் பணியாற்றினாலும் சரி மக்களுக்கானப் பணியாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.