Skip to main content

''ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது'' - தமிழிசை கருத்து

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

N

 

ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''என்னிடம் கூட சில பில்ஸ் நிலுவையில் இருக்கிறது. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தாமதப்படுத்தவில்லை அது தொடர்பாக சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நடைமுறையில் இருந்து முற்றிலுமாக வேறு நடைமுறையை அவர்கள் கொண்டு வருகிறபொழுது இது மக்களுக்குப் பலன் தருகிறதா என்று பார்த்துவிட்டு கையெழுத்துப் போடலாம் என நினைப்பது தவறில்லை.

 

ஒரு ஆளுநருக்கு கையெழுத்திட உரிமை இருப்பதைப் போலவே நாம் சரியான நிலையில் கையெழுத்துப் போடுகிறோமா, மக்களுக்குப் பலன் தருகின்ற ஒரு சட்டத்தில் கையெழுத்துப் போடுகிறோமா என்பதையும் உறுதி செய்ய ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இதைத் தாமதம் என்று எடுத்துக் கொள்வதை விட அதற்கான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக ஆளுநர் உரை எனக்கு மறுக்கப்பட்ட பொழுது கூட அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்வதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது, மக்களுக்கு அது பயன்படாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக உடனே நான் கையெழுத்திட்டேன்.

 

எனவே மக்களைச் சார்ந்துதான் என்னைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது புரியாமல் இங்கே சில பேர் விமர்சனம் செய்கிறார்கள் என்பதுதான் எனது கருத்து. மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். புதுச்சேரியில் கூட மக்களைச் சந்திப்பதை அன்பிற்குரிய அண்ணன் நாராயணசாமி விமர்சிக்கிறார். ஆனால் ஆளுநர்கள் மக்களைச் சந்திப்பதால் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கிறது. பஞ்சாயத்தில் பணியாற்றினாலும் சரி, ஆளுநர் மாளிகையில் பணியாற்றினாலும் சரி மக்களுக்கானப் பணியாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.