Skip to main content

''திமுக ஆட்சியில்தான் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டது'-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

nn

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு, மதுரை மற்றும் திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்கள் இணைந்து நடத்திய 30 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் துவக்க விழாவிற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலைமை தாங்கினார்.

 

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். நிகழ்வின் மேடையில் ஐ.பெரியசாமி பேசும்போது, ''வேடசந்தூரில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்களின் சார்பில் நடத்தப்படும் 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாமிற்கு பல்லாயிரக்கணக்கான மகளிர்கள்  பரிசோதனை மேற்கொள்ள வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில்  அண்ணா.எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா என எத்தனையோ முதல்வர் இருந்திருக்கிறார்கள். ஆனால்  கலைஞர் ஆட்சியில் தான் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதய நோய் மற்றும் பல்வேறு உயிர் காக்கும் நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதிக மான உயிர்கள் காப்பாற்றப்பட்டது.  கிராமப் பகுதியில் உள்ள தாய்மார்கள் குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்கள் மருத்துவரிடம் சென்று மருத்துவ முன் பரிசோதனைகள் செய்வதை  தவிர்த்து வருகிறார்கள். நோய்களின் அறிகுறிகளை முன்பே கண்டறிந்து அவைகளை சரி செய்வது சுலபமாகும்.

 

பெண்களுக்கு முக்கியமாக கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இவைகளை முன்கூட்டியே அறிந்தால் நூறு சதவீதம் குணப்படு தரக்கூடியதாகும்  உடலுக்கு வெளி யில் உள்ள நோய்களை நம்மால் கண்டறிய இயலும், உடலுக்குள் வரும் ஒரு புள்ளியை நாம் கண்டறிவது கடினம். இதுபோன்ற மருத்துவ முகாமில் பங்கேற்று முன் பரிசோதனை செய்யும் பொழுது அவைகளை கண்டறிந்து அதை சீர் செய்வது சுலபமான ஒன்றாகும். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது என்பது முக்கியமானதாகும். மருத்துவரிடம் சென்றால் அவை நமக்கு நல்லபடியாக குணமாகும் என்பது நம்பிக்கை வைக்க வேண்டும். முன்கூட்டியே இவைகளை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் விலை மதிப்புமிக்க உயிர்களை பாதுகாத்து அவர்கள் சுகமாக வாழ முடியும்.

 

முதலமைச்சர்  மருத்துவத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 750 கோடி மதிப்பிலான 5465 புதிய வகுப்பறைகளை கட்ட முதல்வர்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கூட்டுறவுத் துறையில் இருந்தபோது பல்வேறு மருந்துகள் 20 சதவீதம் வரை குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு நீங்கள் அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.