Skip to main content

‘மீண்டும் மஞ்சப்பை விருது’ - அரசுப் பள்ளிக்கு குவியும் பாராட்டுகள்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manjappai Award to Keeramangalam Government School

 

நெகிழி உள்ளிட்ட மக்காத பொருட்களால் நிலமும் நீரும் காற்றும் மாசடைந்து பருவநிலை மாறிக் கொண்டிக்கிறது. இதனை மாற்றியமைக்க நெகிழி பயன்பாட்டை குறைக்க 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்தது. ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தால் மட்டும் போதுமா, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி, தனிநபர்கள் முதல் தனியார் நிறுவனங்களை வரை முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசும் விருதும் வழங்க முடிவெடுத்த அரசு அதற்கான தேர்வுகள் நடத்தியது. இதில் ஏராளமான பள்ளிகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு 3வது பரிசு கிடைத்துள்ளது. இன்று சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடந்த விழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழாவில் துறை அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.

 

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு 3வது பரிசு மற்றும் விருது பெற்ற கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கான விருது மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, உதவி தலைமை ஆசிரியர் குகன், ஆசிரியர்கள் கொடியரசன், கண்ணன், பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி கார்த்திகா உள்பட பலர் பெற்றுக் கொண்டனர். இந்தப் பள்ளியில் பல வருடங்களாக மண்பானையில் குடிதண்ணீர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து சில்வர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடமும் மாணவர்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்வியிலும் கலையில் சாதித்து வரும் பள்ளியில் நீட் தேர்ச்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகளை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிய பள்ளி நீட்டுக்கு முன்பே பல மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை உருவாக்கி தொடர் சாதனை படைத்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தற்போது மஞ்சப்பை விழிப்புணர்விலும் விருது பெற்றுள்ளதால் பொதுமக்களும் பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.