Skip to main content

மங்களூர் சம்பவ எதிரொலி; கோவையில் பலத்த பாதுகாப்பு - காவல் ஆணையர் பேட்டி 

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 Mangalore incident echoes; Tight Security in Coimbatore - Police Commissioner Interview

 

கர்நாடகா மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. பின்னர் அதில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது விசாரணையில் தெரிய வந்தது. அண்மையில் தமிழகத்திலும் கோவையில் கார் வெடித்த வழக்கில் என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

 Mangalore incident echoes; Tight Security in Coimbatore - Police Commissioner Interview

 

கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகச் சாலையைக் கடக்கக்கூடிய பெடஸ்டியன்ஸ் வசதிக்காக அவர்களுக்கென்று சாலையைக் கடப்பதற்குத் தனி நேரம் ஒதுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் ஜங்ஷனில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சிக்னலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியில் பெடஸ்டியன் கிராசிங்க்காக எக்ஸ்க்ளூசிவ் டைமிங் கொடுத்திருக்கிறோம். அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் எதுவுமே கிராஸ் ஆகாது. சாலையைக் கடக்கக் கூடிய பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாகக் கடப்பதற்கு இது வசதியாக இருக்கும்''என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள் “மங்களூர் சம்பவம் தொடர்பாகக் கோயம்புத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய இடங்களில் முக்கியமாக எல்லைகளில் வாகன தணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தவிர இரவு ரோந்து, அதேபோல் அதிகாரிகள் எல்லா இடத்திலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்கிற மாதிரி ரோந்து வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி வாகன சோதனை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்தேகப்படக் கூடிய வாகனங்களைத் தணிக்கை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.