Skip to main content

கணவன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த மனைவி

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

The man who cheated on many women has been arrested

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கிழுமத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் பால்ராஜ்(30). இவருக்கு திருமணமாகி  பூவழகி(22) என்ற மனைவி உள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி தனது கணவர் பால்ராசு மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி எனக்கும் பால்ராசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுக்கு 3 பவுன் செயின் இரண்டரை பவுன் மோதிரம் என ஐந்தரை பவுன் சீர்வரிசை செய்தனர். மேலும் அவருக்கு பத்து பவுன் நகையும் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் தருவதாக தெரிவித்து இருந்தனர்.

 

இந்த நிலையில் திருமணம் ஆனதிலிருந்து எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோக்களை பார்த்தேன். இதுகுறித்து அவரிடம் இந்தப் பெண்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நகை, பணத்திற்காக பல பெண்களிடம் என் பெயரை மாற்றி சொல்லி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்தி வருகிறேன். இதையெல்லாம் நீ கண்டு கொள்ளக்கூடாது உன்னை நான் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் நடந்த இரண்டு மாதங்கள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய நிலையில் திடீரென ஒருநாள் என் பெற்றோர் வீட்டில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார். பின்னர் எனது பெற்றோரிடம் உங்கள் மகள் என்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் வரதட்சணையாக மூன்று லட்சம் பணம், பத்து பவுன் நகையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டு எனக்கு தகவல் கொடுங்கள் என கூறினார்.

 

அதன் பின்னர் உங்கள் மகளை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார. அதன்பிறகு அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்யும் போதெல்லாம் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் வரதட்சணையாக கொடுப்பதாக இருந்தால் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று பதில்கூறி வந்தார். இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னிடம் உனது கணவர் ஏற்கனவே மைனர் பெண் ஒருவருடன் திருமணம் செய்வதாக கூறி தகாத உறவு வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தேடிக் கொண்டிருப்பதாக  தெரிவித்தனர். இதையடுத்து சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பால்ராசுவுடன் எனக்கு திருமணமாகி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

 

இப்படி நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையோடு விளையாடி மோசடி செய்ததோடு என்னுடைய வாழ்க்கையும் சீரழித்து விட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பூவழகி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராசுவை தேடிவந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை சென்று பால்ராசை நேற்று (25.12.2021) கைது செய்து பெரம்பலூர் கொண்டு வந்துள்ளனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர்களிடம் எவ்வளவு நகை பணம் பறித்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை பணம் பறித்த பால்ராஜ் குறித்த செய்தி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.