Skip to main content

காதல் மனைவியை கைவிட்டு இரண்டாம் திருமணத்திற்கு தயாரானவர் கைது..! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Man arrested for preparing for second marriage ..!


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் வசந்தகுமார் (29). சேத்தியாத்தோப்பு 4 ரோடு சந்திப்பு பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகள் தனுஸ்ரீ(22). இவர் கடந்த 2019ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும், வசந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். 

 

இந்த நிலையில், வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற கருத்தில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் வாசலில் தாலிக்கட்டி கணவன் மனைவியாக மாறியுள்ளனர். அதன்பிறகு தனுஸ்ரீ திருப்பூருக்கு பின்னலாடை கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வசந்தகுமாரும் தனது வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

 

இவர்கள் இருவரும் காங்கேயம், அவிநாசி போன்ற பகுதிகளில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததனர். தற்போது கரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டது. இதனால் திருப்பூரில் வேலை இல்லாததால் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்ததோடு அவரவர் பெற்றோருடன் சென்று வசித்து வந்துள்ளனர். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை இருவருமே தங்களது வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளனர். 

 

இதை வசந்தகுமார் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வசந்தகுமாரின் பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர். வசந்தகுமாரும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் நிச்சயதார்த்தம் வரைச் சென்றுள்ளது. இந்தத் தகவல் தனுஸ்ரீக்கு தெரியவரவே, அப்போதுதான் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனுஸ்ரீ சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில், வசந்தகுமார் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவிட்டு தற்போது வேறு திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். 

 

தனுஸ்ரீயின் புகார் மீது வழக்குப்பதிவு செய்த சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.