Skip to main content

உள்ளாட்சி இடைத்தேர்தல்: சேலம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. கோட்டையைத் தகர்க்குமா ஆளுங்கட்சி?

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Local body by-election: ADMK in Salem Union. Will the ruling party demolish the fort?


சேலம் ஒன்றியக்குழு கவுன்சில் 8- வது வார்டு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, 40 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையைத் தகர்க்குமா என்ற பரபரப்பு எகிறியுள்ளது.   

 

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, ஜூலை 9- ஆம் தேதி (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் ஜூலை 12- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

 

மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றியக்குழு கவுன்சிலர் 20, ஊராட்சி மன்றத் தலைவர் 40, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 436 இடங்கள் உள்பட மொத்தம் 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இவற்றில், 34 பதவிகளுக்கு கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, சேலம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் காலியாக உள்ள 8- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால், உள்ளாட்சி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது. 

 

எனினும், 8- வது வார்டில் அ.தி.மு.க.வின் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் வெங்கடேஷ்வரன், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த வார்டுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, இனாம் வேடுகாத்தாம்பட்டி கிராமங்களில், 'எம்.ஜி.ஆர், ஜெ., ஆசி பெற்ற தென்னை மரம் சின்னம்' என்றே சுவர் விளம்பரம் செய்துள்ளார் வெங்கடேஷ்வரன். 

Local body by-election: ADMK in Salem Union. Will the ruling party demolish the fort?

பரப்புரை களத்தில் அ.தி.மு.க. துண்டு, கொடியை தாராளமாக பயன்படுத்தி வரும் வெங்கடேஷ்வரனுக்கு, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி படத்தை பயன்படுத்தக் கூடாது என 'செல்லமான' அட்வைஸ் தரப்பட்டதாகவும் சொல்கின்றனர். 

 

இவரை எதிர்த்து, தி.மு.க. தரப்பில் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் முருகன் களமிறக்கப்பட்டு உள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், பார்த்திபன் எம்.பி., ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகனுக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். 

 

இவர்கள் தவிர, மேலும் 14 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தேர்தல் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெங்கடேஷ்வரனுக்கும், முருகனுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவுகிறது. 

 

தி.மு.க.வின் முருகனும், சுயேச்சை வெங்கடேஷ்வரனும் பங்காளிகள். உள்ளூரில் செல்வாக்கு பெற்ற, 'வேடிச்சி வகையறா' குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளி கொலுசு உற்பத்திதான் இருவருக்கும் தொழில். இருவருமே பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள். இருவரின் வெற்றி வாய்ப்பு குறித்து 8- வது வார்டு வாக்காளர்கள், தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். 

 

'ஆளுங்கட்சி பலம், உதயசூரியன் சின்னம் ஆகியவை எல்லாம் தி.மு.க. வேட்பாளர் முருகனுக்கு பெரிய அளவில் பக்கபலமாக உள்ளன. எங்கும் எப்போதும் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார். பெரிய அளவில் பண பலமும் உள்ளனர். 

Local body by-election: ADMK in Salem Union. Will the ruling party demolish the fort?

இதே மண்ணின் மைந்தரும், சுயேச்சை வெங்கடேஷ்வரன், தி.மு.க. வேட்பாளர் முருகன் ஆகியோரின் நெருங்கிய உறவுக்காரருமான அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாருக்கு இந்த வார்டில் செல்வாக்கு அதிகம். அவரை, கட்சித் தலைமை தேர்தல் வேலைகளில் இறக்கி விட்டுள்ளது, முருகனுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சுத்தி சுத்தி அவருடைய குடும்ப உறவுகள், பங்காளிகள் இருந்தாலும் அவர்களின் வீடுகளில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் முருகன் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை என்ற சிறிய மைனஸூம் இருக்கிறது.

 

இடைத்தேர்தல் நடக்கும் 8- வது வார்டில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை தவிர மற்ற காலங்களில் அதிமுகதான் ஜெயித்து வந்திருக்கிறது. சுயேச்சை வெங்கடேஷ்வரன், சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் தீவிர ஆதரவாளர். இவருக்கு வையாபுரி மூலமே சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

எடப்பாடி பழனிசாமியின் நிழலான இளங்கோவனுக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்து, தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார் வையாபுரி. அவர் மீதான கடுப்பில் வெங்கடேஷ்வரனுக்கு எதிராக இலை கட்சியில் பலர் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளனர். வையாபுரி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளே வெங்கடேஷ்வரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வரவில்லை. 

 

வேட்பாளர் மட்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி சொந்த பந்தங்களை திரட்டி 'மாஸ்' காட்டி வருகிறார். உறவுக்காரர்களின் பலத்த ஆதரவு இருந்தாலும், வெங்கடேஷ்வரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது பெரிய சறுக்கல்தான் என்கிறார்கள்,'' என்கிறார்கள் ர.ர.,க்களும் உ.பி.,க்களும்.

 

மொத்தம் 10 கவுன்சிலர்களைக் கொண்ட சேலம் ஒன்றியமானது, காலம்காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019- ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 5, தி.மு.க. 4, இ.கம்யூ., 1 இடத்திலும் வெற்றி பெற்றது. கம்யூ., ஆதரவுடன் அ.தி.மு.க.வின் சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் மனைவி மல்லிகா, சேலம் ஒன்றியக்குழுத் தலைவரானார். 

Local body by-election: ADMK in Salem Union. Will the ruling party demolish the fort?

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்பட்சத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் சேலம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட முடியும் என கணக்குப்போட்டு, உடன்பிறப்புகள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். சுயேச்சை வெங்கடேஷ்வரன் தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும், தி.மு.க. தரப்பில் 1000 ரூபாயும் பட்டுவாடா செய்து வருகின்றனர். மொத்தம் உள்ள 7,600 வாக்குகளில், 80 சதவீத வாக்காளர்களுக்கு இருதரப்பினருமே பட்டுவாடாவை முடித்துவிட்டனர். 

 

வாக்குப்பதிவுக்கு முதல் நாள், இரவோடு இரவாக ஆளுங்கட்சி தரப்பில் வேட்டி, சேலைகளும், மளிகை பொருள்களுக்கான டோக்கனும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் வார்டு முழுக்க பரவிக் கிடக்கிறது. இரண்டாவது ரவுண்டும் வாக்காளர்கள் குளிர்விக்கப்பட்டால், தி.மு.க. வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும் என்கிறார்கள்.

 

''பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடக்கிறது. ஆளுங்கட்சியினர் முதியோர் ஓய்வூதியத்தொகை படிவத்தை பூர்த்தி செய்து தருகின்றனர். இதுபோன்ற தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடந்தாலும் கூட, தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவே இல்லை,'' என புலம்புகிறார்கள் இதர சுயேச்சை வேட்பாளர்கள். 

 

குடும்பத் தலைவிகளுக்கு இன்னும் 1000 ரூபாய் தரப்படாதது, வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராதது ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருவதாக வெங்கடேஷ்வரன் சொன்னார். 

Local body by-election: ADMK in Salem Union. Will the ruling party demolish the fort?

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிப்பதாக முருகன் கூறினார். 

 

அ.தி.மு.க.வின் கோட்டையை தகர்த்து ஆளுங்கட்சி புதிய வரலாறு படைக்குமா? அல்லது சுயேச்சை மூலமாக வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க.வே வார்டை தக்க வைக்குமா? என்பது ஜூலை 12- ல் தெரிய வரும். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.