Skip to main content

உள்ளாட்சி இடைத்தேர்தல்: சேலம் ஒன்றியத்தில் 86 சதவீதம் வாக்குப்பதிவு! 

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

Local body by-election: 86 percent voting in Salem Union!

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், சேலம் ஒன்றியம் 8- வது வார்டில் 86 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் இறப்பு மற்றும் பதவி விலகல் காரணமாக 30.4.2022ம் தேதி வரை ஏற்பட்டுள்ள ஒரு ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு கவுன்சிலர் மற்றும் 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

 

இதில், வாழப்பாடி ஒன்றியத்தில் நீர்முள்ளிக்குட்டை 1, சங்ககிரி ஒன்றியத்தில் புள்ளாக்கவுண்டம்பட்டி 1, மேச்சேரி ஒன்றியத்தில் தெத்திகிரிப்பட்டி 1, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மின்னாம்பள்ளி 1, பூவனூர் 1 ஆகிய 6 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 

 

இதையடுத்து, சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8- வது வார்டு கவுன்சிலர் பதவி, 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 6 பதவிகளுக்கு இடைத்தேர்தல் சனிக்கிழமை (ஜூலை 9) நடந்தது. இதற்காக மொத்தம் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 

Local body by-election: 86 percent voting in Salem Union!

காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 05.00 மணி வரையில் நடந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வாக்குச்சாவடியிலும் கரோனா நோயாளிகள் வந்து வாக்களிக்கவில்லை.

 

சேலம் ஒன்றியம் 8- வது வார்டில் மட்டும் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வார்டில் மொத்தம் 7683 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6,598 வாக்காளர்கள் வாக்களித்தனர். 

 

இந்த வார்டில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் முருகன் போட்டியிட்டார்.  அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் சுயேட்சையாக களமிறங்கினார். இவர்கள் தவிர மேலும் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது. 

 

இரு வேட்பாளர்களுமே பங்காளிகள் உறவுமுறை ஆவதோடு, தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி, பனங்காடு, இனாம் வேடுகாத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் இவர்களின் உறவுக்காரர்களே அதிகமாக உள்ளனர். அதனால் ஆரம்பத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த வார்டில் மொத்தம் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளனர். ஆண்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி 77 (அ.வா) வாக்குச்சாவடியில் மட்டும் அதிகபட்சமாக 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

 

அதேபோல், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்த தலைவாசல் ஒன்றியத்தில் 74 சதவீதம், மேச்சேரியில் 80 சதவீதம், காடையாம்பட்டியில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மிகக்குறைந்தபட்சமாக தலைவாசல் ஒன்றியத்தில் 184ம் எண் வாக்குச்சாவடியில் மட்டும் 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 

Local body by-election: 86 percent voting in Salem Union!

சேலம் ஒன்றியம், 8- வது வார்டில் நான்கு வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு இருந்தன. இதையடுத்து அங்கு 4 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நல்வாய்ப்பாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 

 

வரும் 12- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.