Skip to main content

உளவுத்துறை கொடுத்த 96 பேர் பட்டியல்; சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

 List of 96 people given by intelligence; Police raided 4 places in Chennai

 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் என மொத்தம் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. இதேபோல் கேரளாவிலும் சோதனையானது தேசிய புலனாய்வு முகமையால் மேற்கொள்ளப்பட்டது.

 

அதே நேரம் சென்னை காவல்துறை சார்பில் சென்னையில் நான்கு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய உளவுத்துறை மற்றும் மாநிலக் காவல்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு 96 நபர்களுடைய பட்டியலை சென்னை காவல்துறைக்கு அனுப்பி இருந்தது. இந்த 96 நபர்களும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத அமைப்புகளுடன்  தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கிறது என்றும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

அதனடிப்படையில், நேற்று சென்னையில் மட்டும் இது சம்பந்தப்பட்ட 4 நபர்களுடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜாபர் சாதிக் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், சிம்  கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முகமது சலாவுதீன் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிசிடிவி பதிவுகள், 7 செல்போன்கள், பழனி பாபாவின் கடிதம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மாயாவதி கண்டனம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong issue Mayawati condemned

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

Armstrong issue Mayawati condemned

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை - இ.பி.எஸ். கண்டனம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Bahujan Samaj State President incident EPS Condemnation

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருற்றேன். ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

Bahujan Samaj State President incident EPS Condemnation

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?. கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?. காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்குச் சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு எனது கடும் கண்டனம். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.