Skip to main content

காவல்துறை அதிகாரி பெயரில் வங்கிக்கு வந்த கடிதம்... பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன்!!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021
The letter that came to the bank in the name of the police officer ... the victim is an ordinary man

 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவர் அதே ஊரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வரவு செலவு கணக்கு வைத்து பயன்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரின் வங்கி கணக்கை அந்த வங்கி மேலாளர் திடீர் என்று முடக்கம் செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்பன் இதுகுறித்து வங்கி மேலாளரை அணுகி விவரம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் மோசடி குற்றச்சாட்டு காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். அதன் அடிப்படையில் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார். 

 

இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த குப்பன், அதைத் தொடர்ந்து  தனது வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு எந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பினார்? அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குப்பனின் கடிதத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய விசாரணை செய்துள்ளார். அப்போதுதான் அதன்படி குப்பன் வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த கடிதமும் வங்கிக்கு அனுப்பவில்லை என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி பெயரில் யாரோ அப்படி ஒரு கடிதம் தயாரித்து வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து குப்பனின் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி வரவு செலவு செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு முறையான கடிதம் ஒன்றை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வளவனூர் வங்கிக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது தொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் அபிஷேக் குமார் போலீசில் புகார் அளித்ததன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரின் வங்கிக்கு கணக்கு மூலம் கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அவர்கள் விசாரணையில் வங்கியில் எளிய முறையில் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதாக பல்வேறு நபர்களின் செல்போன் எண்ணை வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அதோடு குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டால் வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

The letter that came to the bank in the name of the police officer ... the victim is an ordinary man

 

அப்படி ஆலோசனை பெறுபவர்கள் பலர் முன்கூட்டியே வாட்ஸப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் வாட்ஸ்அப்பில் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் கடன் பெறுவதற்கான வழிமுறை ஆலோசனைகளை முழுமையாக சொல்லாமல் மோசடி செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது காலதாமதம் ஏற்பட்டதால் இதைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிலரான ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பாலிசி ஏஜென்ட் ராஜசேகர், கமுதக்குடி முன்னாள் ராணுவ வீரர் முருகன், தீயணைப்பு நிலைய உதவியாளர் சாந்தாராம் ஆகிய மூவரும் தங்கள் ஆலோசனைக்கு பணம் செலுத்திய அந்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். 

 

இதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பெயரில் போலியாக ஒரு கடிதம் தயாரித்து அதனை வளவனூரில் உள்ள அந்த வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாவட்ட கண்காணிப்பாளர் எழுதிய கடிதம் என்பதால் வங்கி மேலாளர் காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளார். ஆனால் அது குப்பன் கணக்கு என்பது பிறகு தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த மோசடியில் ஈடுபட்டது யார்? குப்பனின் வங்கி கணக்கில் எவ்வளவு பேர் ஆலோசனைக் கட்டணம் செலுத்தி உள்ளனர்? விசாரணையும் நடந்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரில் போலி கடிதம் அனுப்பிய மேற்படி மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.