Skip to main content

'கஜா' கற்றுக்கொடுத்த பாடம் - ஒரு வருடத்தில் 31 நீர்நிலைகளைச் சீரமைத்த இளைஞர்கள்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

 

'கஜா புயல்' டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டபோது விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துகிடந்த போது, இத்தனை வருட உழைப்பும் ஒரு சில மணி நேரத்தில் சாய்ந்துபோனதே என்று கண்கலங்கி நின்ற விவசாயிகள், இனி இப்படி மரங்களை வளர்க்க தண்ணீருக்கு எங்கே போவோம் எனக் கண்ணீர் விட்டனர்.

 

தண்ணீரைச் சேமிக்கும் ஏரி, குளம், குட்டைகளும் மராமத்து செய்யப்படவில்லை. நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது எனச் சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், தென்னையால் படித்து வெளிநாடு, வெளியூர்களில் சம்பாதித்துவந்த இளைஞர்கள் இணைந்து 'கஃபா' என்ற அமைப்பைத் தொடங்கி, நீர்நிலைகளை மராமத்துச் செய்யத் தொடங்கினார்கள். 2019 -ல் தொடங்கிய சீரமைப்புப் பணிக்கு நற்பலன் கிடைத்ததால், அடுத்தடுத்து அந்தப் பணியைச் செய்துவருகிறார்கள். 2020 ஆண்டில் மட்டும் 31 நீர்நிலைகளைச் சீரமைத்துத் தண்ணீரைத் தேக்கிச் சாதித்திருக்கிறார்கள், கைஃபா இளைஞர்கள். இதுகுறித்து, கைஃபா இளைஞர்கள் கூறும்போது,



சென்ற (2019) ஆண்டு, நாங்கள் 25 இடங்களில் நீர்நிலைகள் மற்றும் வரத்து வாரிகள் சீரமைக்கும் வேலைகளைச் செய்திருந்தோம். அதன்  தொடர்ச்சியாக இந்த 2020 ஆண்டும் அந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்தோம். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அனைத்தையும் முடக்கினாலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக இடங்களில் சீரமைக்கும் வேலைகளைச் செய்து முடித்தோம்.
 

அந்த இடங்கள் பின் வருமாறு:

 

1. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கல்யாணஓடை வரகன் ஏரி - வரத்து வாய்க்கால்.


2. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், முன்னாவல் கோட்டை முடவன் ஏரி வரத்து வாரி.


3. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் வண்ணான் குளம்.


4. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பேராவூரணி வடபாதி வாய்க்கால்.


5. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கள்ளப் பெரம்பூர், செங்கழு நீர் ஏரி. (குடிமராமத்துப் பணிகள்)


6. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், பிரதாபராமபுரம் பழைய சந்திர நதி வாய்க்கால்.
 

cnc

 

7. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி தெற்கு வடக்கு வடிகால் வாய்க்கால்.


8. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதி திராவிடர் குளம், வரத்து வாரி.


9. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு கொப்பி முனி வாய்க்கால்.


10. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்படினம் சாலை குளம்.


11. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், லக்ஷ்மி நரசிம்மபுரம் வெட்டுக் குளம்.


12. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் பூவற்றக்குடி செல்ல ஊரணி.


13. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி, பெரிய குலத்திற்குச் செல்லும் வரத்து வாரிகள் (2)


14. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு ராஜாளி ஏரி ( குடி மராமத்து)


15.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர் காடுவா ஏரியின் வரத்து வாரி.


16. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புதுப்பட்டினம் வாய்க்கால்.


17. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், தென்னங்குடி பெரிய குலத்திற்கு செல்லும் வரத்து வாய்க்கால்கள் (3)


18. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் வரத்து வாரிகள்


19. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை பரம்பாடி குளம் வரத்து வாரிகள் (3)


20. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பட்டிப்புஞ்சை வெட்டு குளம்.


21. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மரக்காவலசை கழுமங்குடா மையத்தான் குளம்.


22. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், துறையூர் பிள்ளையார் குளம்.


23. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பின்னவாசல் பிக்சுண்டு குளம்.


24. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் பெரிய ஏரி.


25. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம்,  மருங்கப்பள்ளம் காட்டுக் குளம்.


26. தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், மருங்கப்பாள்ளம் கைலான் குளம்.


27. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமிரங்கோட்டை கொழுங்கசெரி.


28. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா பிள்ளையார் குளம்.


29.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சொர்ணக்காடு ஆதி திராவிடர் குளம்.


30. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி வண்ணான் குட்டை.


31. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மனோரா கடலுக்கு அருகே சதுப்பு நிலக்காடுகள் உருவாக்க கரைகள் அமைக்கப்பட்டது.
 

காவேரி டெல்டாவில் 4 மாவட்டங்கள், 8 வட்டங்கள், மொத்தம் 31 நீர்நிலைகள் எனச் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக இடங்களில் வேலைகள் நடந்தது. காவிரி நீர் மற்றும் பருவ மழையினால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காட்சி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதையல்லாமல் பல இடங்களில் மரக் கன்றுகள், பனை விதைகள், குறுங்காடுகள், மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் எனப் பல செயல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
 

nkn


இந்தத் தருணத்தில் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த அனைத்து ஊர் மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், இந்த முயற்சியினை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கும், பொருளாதார உதவிசெய்த முகம் தெரிந்த, தெரியாத அனைத்து நல்லுங்களுக்கும், மில்ஆப் தொண்டு நிறுவனத்திற்கும், எங்கள் வேலைகளின் செலவைக் குறைக்க பெரும் உதவியாய் வாகன உதவிசெய்த மில்மிஸ்ட் ஃபுட் ப்ரொடெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், பி.டபிள்யூ.டி அதிகாரிகளுக்கும், எங்களது செயல்களைப் பல இடங்களுக்குக் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நண்பர்களுக்கும், ஜெ.சி.பி, ஹிட்டாச், ட்ராக்ட்ர் போன்ற வாகன ஓட்டுநர்களுக்கும், கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இதேபோல 2021 ம் ஆண்டும் இதை விட பல மடங்கு ஆக்கத்துடன், மேலும் பல இடங்களில் நீர்நிலைகளை மீட்டு, சீரமைத்து, தண்ணீரை நிரப்புவோம். அதேபோல, அடுத்த 5 ஆண்டிற்குள், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் மீட்கப்படும், தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் முடியும், தண்ணீர்ப் பஞ்சம் காணாமல் போகும், முப்போகமும் விவசாயம் நடக்கும்! என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.