Skip to main content

லெகின்ஸ் அணிந்து கல்லூரி பெண் விடுதிக்குள் புகுந்த பலே திருடன்! கதறிய மாணவிகள்...

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரி உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கடந்த 27ஆம் தேதி அதிகாலையில் முதல் தளத்தில் உள்ள அறையில் ஒரு மாணவி கழிவறை செல்ல எழுந்த போது அறையின் கதவு திறந்து கிடந்தது, பொருட்களும் சிதறி கிடந்தது செல்போன் காணவில்லை தனது செல்போன் எங்கே என்று அவர் தேடத் தொடங்கினார்.

 

Trichy



அதன் பின்புதான் தெரிந்தது மற்ற மாணவிகளின் நகை, பணம், லேப்டாப் எல்லாம் மாயமாகி இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

அந்த அறையைத் தொடர்ந்து மற்ற அறைகளில் தங்கி இருந்த மாணவிகளும் தங்களின் பணம் நகை லேப்டாப் செல்போன் ஆகியவை காணவில்லை என கதறினார்.
 

மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியின் பொறுப்பாளர் அங்கு வந்து விசாரித்தபோது 18 செல்போன்கள், 18 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடு போய்விட்டதாக 10 மாணவிகள் புகார் அளித்தனர்.
 

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணி அளவில் மாணவிகள் விடுதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முதல் மாடியில் இருந்து லெக்கிங்ஸ் சேலை அணிந்த ஒர் உருவம் கீழே இறங்கி செல்வது தெரிந்தது. அந்த உருவத்தை கவனித்தபோது அந்த உருவம் ஆண் எனவும் மீசையுடன் இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.


 

 

எனவே மர்ம நபர் பெண் வேடமணிந்து மாணவிகள் விடுதிக்கு சென்று நகை பணம் செல்போன் லேப்டாப் ஆகிவற்றை திருடியிருப்பது தெரிந்தது. இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 

இதற்கு இடையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த மாணவிகளை விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.


 

 

பேச்சு வார்த்தையில் மாணவிகள் நிர்வாகத்திடம் பெண்கள் விடுதிக்கு ஆண் ஒருவரை எப்படி விடுதி காப்பாளராக நியமிக்கலாம். அவரும் இரவு நேரங்களில் எங்கள் அறைகளை பூட்டிவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள மற்ற கல்லூரி கட்டிடங்களுக்கு தண்ணீர் மோட்டர் ஆன் பண்ணி விட சென்றால் மீண்டும் அதிகாலை தான் வருவார். அதுவரை நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம். அதிகபடியான கண்காணிப்பு கேமிரா பொறுத்த வேண்டும், திருட்டு போன பொருட்கள் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 

இதை ஏற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சில நாட்களில் இதை எல்லாம் சரி செய்த பின்பு விடுதி திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.