Skip to main content

காலதாமதமான பிரேதப் பரிசோதனை... பொது மக்களின் சாலை மறியலுக்கு பின்பு நடவடிக்கை! 

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
Late autopsy; Action after the public road blockade

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செங்குறிச்சி. இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகப்பன் - சிவசக்தி (22) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது சாய் கிருஷ்ணா என்ற இரண்டு வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அழகப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது மனைவி சிவசக்திக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது. குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு கணவரிடம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளார் சிவசக்தி. ஆனால் அழகப்பன் குடிப்பழக்கத்தைக் கைவிடவில்லை, வழக்கம்போல் நேற்றும் (20.06.5021) அழகப்பன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

 

இதனால் வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனம் வெறுத்துப்போன சிவசக்தி வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் சிவசக்தி திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துபோனதால் அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் அவர்கள் உரிய விசாரணை செய்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும். அதன்படி திருக்கோவிலூர் கோட்டத்தில்  இந்த ஊர் அமைந்துள்ளதால் அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய் வர்தினி முறைப்படி விசாரணை நடத்த வேண்டும்.

 

ஆனால், சிவசக்தியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  கொண்டு செல்லப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் சாய் வர்தினி விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை விசாரணை செய்து பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைச் சான்று அளிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், "திருக்கோவிலூர் கோட்டாட்சியர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். நான் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது" என கூறி மறுத்துள்ளார். இரு அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் பிரேதப் பரிசோதனை செய்வது காலதாமதமாகி உள்ளது. அதிகாரிகளின் இந்த தட்டிக்கழிப்பால் கோபமடைந்த சிவசக்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் அவர்களை உடனடியாக பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யுமாறு வாய்மொழி உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் பரிந்துரை சான்றளிக்க அதன் பிறகு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சாலை மறியல் செய்த பொதுமக்கள் மற்றும் சிவசக்தி உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அகால மரணம் அடைந்த ஒரு இளம்பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதற்கு மருத்துவர்கள் காவல்துறையினர் முயற்சி செய்தும் வருவாய்த்துறையைச் சேர்ந்த கோட்டாட்சியர்கள் பரிந்துரைச் சான்று அழிப்பதற்கு தட்டிக்கழித்ததன் காரணமாக காலதாமதமானது. அரசு அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் தங்கள் பணியைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யார் அறிவுரை சொல்வது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.