Skip to main content

நில தகராறு; தி.மு.க ஒன்றிய செயலாளர் மீது குற்றச்சாட்டு

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

Land dispute! DMK member  Accusation on!
மாதிரி படம் 

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பஞ்சாயத்து உட்பட்ட பஜார் வீதியைச் சேர்ந்தவர்கள் ஹரி நாராயணன், சரவணன், அசோக் குமார், அருண்குமார் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து டிசம்பர் ஒன்றாம் தேதி புகார் மனு ஒன்றைத் தந்துள்ளனர்.


அந்தப் புகார் மனுவில், அணைக்கட்டு அருகே உள்ள ஏரிபுதூர் என்கிற கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து எங்கள் அப்பா 7. 45 ஏக்கர் நிலம் வாங்கினார். அது இப்போது எங்கள் பெயரில் உள்ளது. அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது எனச் சொல்லி 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த அணைக்கட்டு ஒன்றியத்தின் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் பிரச்சனை செய்கிறார். ராமகிருஷ்ணனுக்கு வாரிசு கிடையாது. அவரை ஏமாற்றி வாங்கினீர்கள்; அவர் விற்றது செல்லாது எனச்சொல்லி அவரது தம்பி பத்மநாபன் பிரச்சனை செய்தார். இந்த இடம் எங்களுக்கே சொந்தம் என மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் ஒ.செ வெங்கடேசனின் தந்தை பத்மநாபன். அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றோம். 


ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு ஒ.செ பதவியில் இருப்பதால் ஆளும்கட்சி என அதிகாரத்தோடு அடிக்கடி பிரச்சனை செய்கிறார். நிலத்தில் ஆட்களோடு வந்து புகுந்து மண் அள்ளினார். அங்கிருந்த எங்களுக்குச் சொந்தமான வீட்டையும் இடித்து நாசம் செய்தார். இதைக் கேள்வி கேட்ட எங்கள் அக்கா கவிதாவின் தாலியை அறுத்துவிட்டார்.  இது குறித்து புகார் அளித்தால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம் எனக் கூறினர். 

 

இதுகுறித்து அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசனிடம் நாம் கேட்டபொழுது, எங்களுடைய பெரியப்பா அந்த நிலத்தை எங்கள் பெயரில் உயில் எழுதியுள்ளார். அது இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்து, அது கிடைத்தது. அதனால் அந்த இடத்துக்குச் சென்றேன், அவர்கள் தகராறு செய்தார்கள். இதை வீணாக என் அரசியல் எதிரிகள் பிரச்சனை செய்கிறார்கள். காவல்துறை விசாரணையில் இருதரப்பையும் நீதிமன்றத்துக்கு போகச்சொல்லியுள்ளார்கள். அதுவரை யாரும் நிலத்தில் யாரும் நுழையக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள் என்கிறார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.