Skip to main content

உறவினர்களுக்குள் ஏற்பட்ட நில தகராறு: சண்டைய விலக்கச் சென்றவர் அடித்து கொலை!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
Land dispute between relatives: Defender beaten to death

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வஞ்சினபுரம். இந்த ஊரைச் சேர்ந்த முருகேசன், கலையரசன் ஆகிய இருவரும் உறவினர்கள். மேலும், இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்லும் பாதை சம்பந்தமாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் பாதை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கலையரசன் தம்பி சிலம்பரசன், முருகேசன் மகன் அருள்குமாரை சந்தித்து, "ஏன் பாதை பிரச்சனைக்காக எனது அண்ணன் கலையரசன், அண்ணி ஆகியோரிடம் தகராறு செய்கிறீர்கள்.

 

பாதை சம்பந்தமாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறீர்கள். காவல்துறை மூலம் சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே? மேலும் உங்களுக்குள் நடந்த சண்டையில் ஊரிலேயே இல்லாத என் மீதும் காவல் துறையில் புகார் அளித்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?" என்று கேட்டுள்ளார். இதனால் அருள்குமார் சிலம்பரசன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள்குமார் சிலம்பரசனை தாக்கியுள்ளார். அந்த நேரத்தில் அதே ஊரைச் சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவர் அந்த வழியாக வந்துள்ளார். அவர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுவதைப் பார்த்து பதட்டம் அடைந்து, "ஏன் உறவினர்களான உங்களுக்குள் வீண் சண்டை இதை இரு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்" என்று இருவருக்கும் இடையே புகுந்து சண்டையை விலக்கியுள்ளார்.  

 

இதில் கோபமான அருள்குமார் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து பிச்சை பிள்ளையின் பின் மண்டையில் தாக்கியுள்ளார். இதில் பிச்சை பிள்ளை அதே இடத்தில் ரத்தம் பீரிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பிச்சை பிள்ளையை மீட்டு செந்துறையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் டி.எஸ்.பி மதன் செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உட்பட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

 

உயிரிழந்த பிச்சை பிள்ளை உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சண்டையை விலக்கச் சென்றவர் கொலையான சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகேசன் அவரது மனைவி சிவமணி மகன் அருள்குமார் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.