Skip to main content

“கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம்; திமுக ஆட்சியில் பணிகள் துவக்கம்” - ஐ. பெரியசாமி பெருமிதம்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

“The laid-back bus station; Commencement of works in DMK regime ”- I. Periyasamy

 

கன்னிவாடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். “2011ம் வருடம் கட்ட வேண்டிய பேருந்துநிலையப் பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டன. திமுக ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களில் பணிகள் துவக்கப்பட்டது” என ஐபெரியசாமி பெருமிதமாகக் கூறினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சியில் முறையான பேருந்துநிலைய வசதி இல்லாததால் பேருந்துகள் நிற்காமல் சென்று கொண்டிருந்தன. இது தவிர சாலையில் பேருந்துகளை நிறுத்தும்போது போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுவந்தது. இதைப் பற்றி ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் பேருந்துநிலைய வசதி வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். 

 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார். புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கன்னிவாடியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

“The laid-back bus station; Commencement of works in DMK regime ”- I. Periyasamy

 

இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது; “கடந்த 2011ம் வருடம் திமுக ஆட்சியின்போது பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.1.5 கோடி மதிபில் பேருந்து நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களுக்குள் கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையம் 6 கோடி மதிப்பில் அமைக்க இன்று பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

 

இது போல, சீவல்சரகு பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் துவங்கப்பட உள்ளது. 50 வருடங்களாக சின்னாளப்பட்டியில் உள்ள சாயப்பட்டறை தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆத்துப்பட்டியில் பாலம் மற்றும் தடுப்பணை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஆத்தூர் தொகுதி மக்களின் அனைத்து குறைகளும் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். இங்கு கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு நுழைவு வாயில்கள், இரண்டு உணவகங்கள், தரைத்தளம் மற்றும மேல்தள வசதியுடன் வணிக வளாகம், மழைநீர் சேகரிப்பு உட்பட அனைத்து கட்டமமைப்பு வசதிகளும் சிறப்பாக அமைய உள்ளது. அதுபோல், இந்த கன்னிவாடி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கும், பெங்களுருக்கும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். விரைவில் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

கட்சி பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister I.Periyasamy consultation with party officials!

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவால் ஆத்தூர் தொகுதியில் கிளைக்கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமைச்சரின் உத்தரவுப்படி மகளிர் அணியினர், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுவீடாக சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 45 வருடங்களாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்த திமுகவினர் முதல் முறையாக கூட்டணி கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்திய கூட்டனியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டனியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றிக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பணி ஆற்றிவருகிறார்.

Minister I.Periyasamy consultation with party officials!

அத்தோடு, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரையும் ஆத்தூர் தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் பம்பரம்போல் சுழன்று தேர்தல் பணியாற்றி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் உட்பட சில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள கட்சி பொறுப்பாளர்களிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து   சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதோடு நமது வெற்றி இந்திய அளவில் பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு நீங்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வருகிறார்.