Skip to main content

மீன் பிடி படகுகளில் ரூ.1526 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்திய குமரி மீனவா்கள் கைது! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Kumari fishermen arrested

 

கேரளா மாநிலம், கொச்சியை மையமாக வைத்து கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக கடத்தல் தொழில் நடப்பது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் கடத்தல் தடுப்பு பிரிவினா் கொச்சியை ரகசியமாக கண்காணித்து வருகின்றனா்.


இந்த நிலையில் தான் சா்வதேச அளவில் கடலில் படகு மூலமாக ஹெராயின் கடத்தி வந்த கடத்தல் கும்பலை சோ்ந்த 20 பேரை ஒன்றிய அரசின் டைரக்டா் ஆப் ரெவன்யூ இண்டலிஜன்ஸ் ஏஜென்சி (டிஆா்ஐஏ) கைது செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து லட்சத்தீவு வழியாக கொச்சிக்கு ஹெராயின் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து "ஆப்ரேசன் கோஜ்பீன்" என்ற பெயரில் டிஆா்ஐஏ மற்றும் கடலோர பாதுகாப்பு படையினா் அரபிக்கடல் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.


அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தி வந்த கப்பலில் இருந்து மூடைகளை அகத்தி தீவில் வைத்து குமரி மாவட்டம் குளச்சலை சோ்ந்த பிரின்ஸ் மற்றும் லிட்டில் ஜீசஸ் என்ற பெயா்களை கொண்ட இரண்டு மீன்பிடி படகுகளில் ஏற்றி கொச்சி கடல் எல்லையை நோக்கி அந்த படகுகள் வந்து கொண்டிருந்தபோது "ஆப்ரேசன் கோஜ்பீன்" படையினா் அந்த இரண்டு படகுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தனா். ஆனால், அந்த படகு மீன் பிடிக்க பயன்படுத்தியதாக தெரியவில்லை அதனைத் தொடர்ந்து முழுமையாக சோதனை செய்த போது இரண்டு படகுகளிலும் உள்ள பாதாள அறைகளில் ஹெராயின் மூடை மூடையாக பதுக்கி வைத்தியிருந்ததை கண்டு பிடித்தனா். 


மொத்தம் 220 மூடைகளில் கடத்தி வரப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ.1526 கோடியாகும். சமீபத்தில் கடத்தி வரப்பட்ட ஹெராயின் பிடிபட்டத்தில் இது தான் பெரிய மதிப்பு என்றனா் கடத்தல் தடுப்பு பிரிவினா். இதனை தொடா்ந்து அந்த இரண்டு படகுகளில் இருந்த 20 மீனவா்களை கைது செய்து கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களில் 16 போ் குமரி மாவட்டம் குளச்சல், தூத்தூா், நித்திரவிளையை சோ்ந்தவா்கள் என்றும் மீதியுள்ள 4 போ் கேரளாவை சோ்ந்தவா்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.