Skip to main content

ஐந்து வருடங்களாக அவதி; மாணவர்களுக்காக ஒன்றிணைந்த பாஜக - காங்கிரஸ்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Kumari District Pathmanabapuram School issue

 

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

 

இதில் தொடக்கப் பள்ளியில் 97 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடக்கப்பள்ளி கட்டிடம் 2017-ல் ஒக்கி புயலால் சேதமடைந்தது. ஆனால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதே கட்டிடத்தில் வகுப்புகளை நடத்தி வந்தனர். மேலும், அந்தக் கட்டடத்தில் மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை எனப் பெற்றோர்கள் பிரச்சனை எழுப்பியதால் கடந்த மார்ச் மாதம் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு அருகில் இருந்த இன்னொரு கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வந்தன.

 

Kumari District Pathmanabapuram School issue

 

இந்த நிலையில், அந்தக் கட்டிடமும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதோடு மழை நீர் வகுப்பு அறையில் வழிகிறது. அதுபோல் கழிவறைகளும் இடிந்து கிடப்பதால் மாணவிகள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.  இது தொடர்பாக பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழுவும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த பாஜக மற்றும் காங்கிரசார் மாணவர்களுக்கு ஆதரவாக சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் கையில் பதாகையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து அங்கு வந்த பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக் கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.65 லட்சம் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கட்டிடங்கள் கட்டுவதாகவும், தற்போது வகுப்புகள் நடைபெறுவதற்கு தற்காலிக வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.