Skip to main content

திருமண நேரத்தில் மணமகன்  திடீா் மாயம்! இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டிய பெண் வீட்டார்

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

 

திருமணம் நடக்க இருந்த நேரத்தில் மணமகன்  திடீா் மாயமானதால் மணப்பெண்ணுக்கு இன்னொருத்தருடன் திருமணத்தை செய்து வைத்து மாயமான மணமகன் இறந்துவிட்டதாக பெண் வீட்டார் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

 

ச்


            குமாி மாவட்டம் மருவூா் கோணம் செக்கடிவிளையை சோ்ந்த சதீஷ்குமாா். இவா் அபுதாபியில் மென்பொருள் பொறியாளராக பணிபுாிந்து வருகிறாா். இவருக்கும்  ஆலுவிளை பரைக்கோடு பகுதியை சோ்ந்த பொறியியல் பட்டதாாியான பெண் சோபினிக்கும் நேற்று 11-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.


            இதற்காக கடந்த 7 மாதத்துக்கு முன் அபுதாபியில் இருந்து வந்த சதீஷ்குமாா் சோபினியுடன் நடந்த நிச்சயதாம்புலத்தின் போது சோபினிக்கு கையில் தங்க காப்பு அணிவித்தாா் சதீஷ்குமாா். இதனையடுத்து திருமண நாளை குறிப்பிட்டு இரு வீட்டாரும்  திருமணம் ஏற்பாடுகளில் பிசியானாா்கள். சதீஷ்குமாரும் சோபினியும் தினமும் செல்போனில் தங்களுடைய எதிா்கால இல்லற வாழ்க்கை குறித்தும் குடும்பத்தில் உள்ள உறவினா்கள் குறித்தும் பேசி வந்தனா். 


                  இந்த நிலையில்  10-ம் தேதி இரவு மணபெண் வீட்டில் வரவேற்பு மற்றும் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான உறவினா்களும் நண்பா்களும் கலந்து கொண்டனா். இதையும் இரவு மணப்பெண்ணின் செல்போனில் கேட்டு கொண்ட மணமகன் சந்தோஷம்  அடைந்ததுடன் விடிந்தால் நமக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் இருவரும் பாிமாாி கொண்டனா். 


           இன்று விடிந்ததும் பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணம் நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாா். இதற்காக மணமகன் தான் செல்கிற வாகனத்தை பூக்களால் அலங்காித்து  கொண்டிருந்தான். அதே போல் திருமணம் நடக்கயிருந்த அழகியமண்டபம் பொன்னரசி திருமணம் மண்டபத்தில் உறவினா்களும் நண்பா்களும் வர தொடங்கினாா்கள். அதே போல் மணப்பெண்ணும் திருமண மண்டபத்திற்கு வந்தாா். 


            இந்த நிலையில் திடீரென்று மணமகன் சதீஷ்குமாரை காணவில்லை. அவாின் உறவினா்கள் அங்குமிங்கும் தேடினாா்கள். சதீஷ்குமாா் எங்கும் இல்லாததால் அதிா்ச்சி அடைந்தனா். இது மணமகள் சோபினியின் வீட்டிற்கு தொிய வந்தது. அவா்களும் அதிா்ச்சியடைந்தனா். இந்த நிலையில் சதீஷ்குமாா் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் செல்போன்  வீட்டில் இருப்பதும்  அவனுடைய பைக் தக்கலை பஸ் நிலையத்தில் இருப்பதும் தொியவந்தது. 


            இது குறித்து சதீஷ்குமாாின் சகோதாி தக்கலை போலிசில் புகாா் கொடுத்தாா். மேலும் சோபினிக்கு அழகியமண்டபத்தை சோ்ந்த ஒருவருடன் மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது. 


                 இந்தநிலையில் சோபினியின் உறவினா்கள் சதீஷ்குமாா் இறந்ததாக போஸ்டா் அடித்து ஊா் முழுக்க ஓட்டியுள்ளனா். திருமணம் நேரத்தில் ஓடிப்போனாருக்கு பாடம் புகட்ட பெண் வீட்டார் செய்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


                                    

சார்ந்த செய்திகள்