Skip to main content

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்-குற்றவாளிக்கு துணைபோகும் காவல்துறை?

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

krishnagiri incident... police issue

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர்  தன்னுடைய நிலத்திற்கு சென்றுவிட்டு (4/10/2022) மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அதேபகுதியில் விவசாயம் செய்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் வந்துள்ளான். சிறுமி சென்றதை பார்த்து, யாரும் இல்லாத சூழ்நிலையில், அந்த இடத்திலே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். இதனால் சிறுமி பதறியடித்துக் கொண்டு அழுதபடியே ஓடி வந்துள்ளார். அங்கு பக்கத்திலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த விசிக கட்சி செய்தி தொடர்பாளர் தமிழ்வளவன் நடந்ததை கேட்டு உடனடியாக 100 க்கு தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லியுள்ளார். உடனடியாக சாமல்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ அமர்நாத், என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலே, பாதிக்கப்பட்ட மக்களின் மீது 'யாரு நீயா... நீயா...'' என ஆதிக்க தோனியில் பேசியுள்ளார்.

 

அப்போது விசிகவை சேர்ந்த தமிழ்வளவன் 'சார் நாங்கள்தான் போன் செய்தோம். எங்க ஊர் குழந்தை மீதுதான் அந்த கொடுமை நிகழ்ந்தது. அந்த பையன் ஓடிவிட்டான். அவனை தேடி வழக்குபதிவு செய்ய வேண்டிய நீங்களே, எங்களை குற்றவாளியாக பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்' என கேட்டுள்ளார். மேலும் 'அந்த பையன் மீது பாலியல் வழக்கான போக்சோ வழக்கு போடுங்க' என சொல்லியுள்ளார். அதற்கு ''நீ யார் அந்த வழக்கு போடு இந்த வழக்கு போடு என சொல்வதற்கு. போய் உன் வேலையை பாரு'' என சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

 

krishnagiri incident... police issue

 

உடனடியாக வழக்குப்பதிவு செய் என போராட்டக் களத்தில் இறங்க, இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ போராட்டம் செய்த தமிழ்வளவன் மீது துப்பாக்கியை எடுத்து அவரது நெஞ்சின் மீது வைத்து மிரட்டியுள்ளார். உடனடியாக அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பத்மாவதி ''சுட்டுத்தள்ளு அவன'' என தனது பழைய பகையை வைத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.  இதனால் அங்கு தள்ளுமுள்ளு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ்வளவன் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

krishnagiri incident... police issue

 

இதுவரையிலும் போலீசார் சென்று நடந்தது என்னவென்று கேட்கவில்லை, வழக்குப்பதிவும் செய்யவில்லை, ஆனால் மாறாக வழக்கு தொடுத்தவரின் மேல் வழக்கு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பத்மாவதியிடம் கேட்ட போது, ''அதுபோன்ற எந்த வழக்கும் வரவில்லை. அதுபோல எதுவும் நடக்கவே இல்லை'' என மறுத்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூரிடம் கேட்டபோது, ''அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை உடனடியாக விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.