Skip to main content

தாக்கிய காவலர் கைது... ஸ்விகி ஊழியரிடம் நலம் விசாரித்த தமிழக டிஜிபி!

Published on 05/06/2022 | Edited on 05/06/2022

 

kovai incident.. DGP inquires about health of swiggyi employee

 

உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியரை போலீசார் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான ஸ்விகி ஊழியர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், ''எனது பெயர் மோகனசுந்தரம் சார்.. நான் ஸ்விகியில் வேலை செய்றேன் சார். நேற்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள் உணவு டெலிவெரி செய்வதற்காக ஃபன் மால் அருகே வந்து கொண்டிருந்த நேரத்தில், நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் வந்தது. ஒரு பொண்ணும் பையனும் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது பஸ் அந்த பொண்ண இடிச்சுட்டு போனது. நான் சென்று பஸ்ஸ நிப்பாட்டுங்க அண்ணா, அந்த பொண்ண இடிச்சுட்டு நிக்காம போறீங்க என சத்தம் போட்டேன். அதற்கப்புறம் நிப்பாட்டுனாங்க. அதற்கப்புறம் அங்கிருந்த போலீசார் ஒருவர் என்னை எதுவும் கேட்காமல் கன்னம் கன்னமாக அறைந்துவிட்டு 'நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ்ஸை நிறுத்தற அளவுக்கு நீ பெரிய ஆளா... நீ என்ன போலீசா' என தாக்கி எனது ஹெட்போனை பிடுங்கி எறிந்தார். எனது மொபைல், வண்டி சாவியை  எடுத்துக்கொண்டு போய்விட்டார். என்கிட்ட ஹாஸ்பிடல் போக கூட காசில்ல சார். நேத்து 500 ரூபாய் வைத்திருந்தேன். அதிலும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 300 ரூபாய் வைத்திருந்தேன்.

 

ஸ்விகி என் பார்ட் டைம் தான் சார். நான் பிசினெஸ் செய்றேன். ஸ்டேசனரி ஷாப் ஒன்று வைத்து நடத்துறேன் சார். கரோனா காலத்துல எங்களுக்கு கடை வாடகை கட்ட முடியல சார். சாப்பாட்டுக்கு கூட காசில்லாததால ஸ்விக்கு வேலைக்கு வர வேண்டிய நெலம வந்திருச்சு. ஸ்விகில வேலை பாக்குற பசங்க எல்லாம் பி.இ, பி.காம்'னு நெறய படிச்சுருக்காங்க சார். நான் ஆறு லாங்குவேஜ் பேசுவேன் சார். கோகுலம் பார்க்ல ஐடி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணிருக்கேன். என்னோட குடும்ப சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கேன். வேற வேலைக்குப் போனால் குழந்தையை பார்த்துக்க முடியாது. சில டைம் கடைல ப்ராஜெக்ட் வரும் அந்த சமயத்துல கம்பெனில வேலை செய்தா என்னால லீவ் போடமுடியாது. ஒருநாள் லீவ் தருவாங்க ரெண்டு நாள் லீவு தருவாங்க, மூணாவது நாள் தரமாட்டாங்க சார். அதுனால ஸ்விகில வேலை செய்யுறேன். காலேஜ், ஸ்கூல் ப்ராஜெக்ட் வந்தா ஸ்விகிய லாக் அவுட் பண்ணிட்டு போயிடுவேன். எனக்கு கன்வீனியென்ட்டா இருக்கறதாலதான் ஸ்விகில ஒர்க் பண்றேன். இல்லனா நானும் கம்பெனிக்கு வேலைக்கு போயிருப்பேன் சார்'' என்றார் கண்ணீருடன்.

 

இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காவலர் சதீஷ் நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்விகி ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் பீலமேடு காவல்துறையினர் போக்குவரத்து காவலர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பொது இடத்தில் அவதூறாகப் பேசுவது, தெரிந்தே காயப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைதான சில மணிநேரத்திலேயே காவலர் சதீஷ் சொந்த ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஸ்விகி ஊழியர் மோகன சுந்தரத்திடம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நலம் விசாரித்தார் என தமிழ்நாடு காவல் துறையின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.