Skip to main content

கோடநாடு விவகாரம்: மீண்டும் விசாரணையைத் தொடங்கியது சேலம் காவல்துறை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Kodanad affair: Salem police resumes probe

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கில், சேலம் மாவட்ட காவல்துறையினர் மேல்விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நள்ளிரவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் ஓட்டுநரான கனகராஜ், அடுத்த ஐந்து நாள்களில், அதாவது ஏப்ரல் மாதம் 28- ஆம் தேதி சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் உயிரிழந்தார். 

 

இது தொடர்பான விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்தது. கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது சகோதரர் தனபால் அதை மறுத்து கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இதற்காக சேலம் நீதிமன்றம் மூலம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாக, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கோடநாடு கொலை, கொள்ளை, அதைத் தொடர்ந்து அரங்கேறிய நான்கு மர்ம மரணங்கள் தொடர்பாக, உதகை காவல்துறையினர் மேல் விசாரணையை நடத்தி வருகின்றன. கனகராஜ் சகோதரர் தனபால் மனைவி, உறவினர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியிருந்தனர். அவர்கள் அளித்த புதிய தகவல்கள் அடிப்படையில் கனகராஜ் விபத்து வழக்கை காவல்துறை மீண்டும் விசாரித்து வருவதாகத் தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.