Skip to main content

ஆள் கடத்தல்.. கட்டப் பஞ்சாயத்து.. கொலை வெறி தாக்குதல்.. ஒன்றிய செயலாளர்  கைது

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Kidnapping case Union Secretary arrested by police

 

ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத ஆறு பிரிவுகளில் தி.மு.க.வின் ஒ.செ. கைது செய்யப்பட்டிருப்பது முத்து நகர் மாவட்டத்தைத் தட தடக்க வைத்திருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வான இளையராஜா அந்தப் பஞ்சாயத்தின் தலைவரும் கூட. இந்த இளையராஜா பல நிழல் வேலைகளைத் திரை மறைவில் நடத்தி வந்திருக்கிறார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராகப் பணிபுரிகிற முருகப்பெருமாள் மதுரையைச் சேர்ந்தவர். இதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியிலிருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் மருத்துவரை கடந்த மூன்று மாதமாகக் காதலித்து வந்திருக்கிறார் முருகப்பெருமாள், சில வேளைகளில் தன் காதலி பெண் மருத்துவரின் வீடு வரையும் போய் வந்திருக்கிறார். வீடு வரை வந்த இவர்களின் வெளிப்படையான காதலை காதலியின் தாயாரான, நகரின் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிபவருக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும், பெண்ணின் தாய்க்கு அவர்களின் காதலில் இஷ்டமில்லாததால் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.


ஆனால், தாயின் எதிர்ப்பை மீறி அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இதற்கு ஃபுல் ஸ்டாப் வைக்க எண்ணிய பேராசிரியை தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவரும், ஒட்டப்பிடாரம் தி.மு.க.வின் வடக்கு ஒ.செ.வுமான இளையராஜாவிடம் தன் மகளின் காதலைத் தெரிவித்து, பையனை கண்டித்து வைக்கச் சொன்னதுடன் இனி அவள் பக்கம் அவன் திரும்பக் கூடாது என எச்சரிக்கை செய்யுமாறும் கூறியிருக்கிறாராம்.


இதையடுத்து கடந்த 18ம் தேதியன்று மதியம் பயிற்சி முடித்துவிட்டு வந்த டாக்டர் முருகப் பெருமாளை தன் சகாக்களுடன் தனது காரில் கடத்திக் கொண்டு ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டனூத்திலிருக்கும் தன் தோட்ட வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா. கட்டப் பஞ்சாயத்து, ஊராட்சிக் காண்ட்ராக்ட் தொடர்பான பேரங்கள் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிழல் காரியங்கள் போன்ற வரவு செலவுகளையெல்லாம் இங்கே தான் டீல் பண்ணுவாராம் ஒ.செ. இளையராஜா. 


மருத்துவர் முருகப்பெருமாளை சுற்றி நின்று கொண்டிருந்த இளையராஜாவும், சகாக்களும், ‘காதலை இத்தோட முடிச்சுக்க லேய். பின்னால போன நடக்குறது வேற’ என மிரட்டியவர்கள் கம்பாலும், ரப்பர் பைப்பாலும் அவரை தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு ரத்தக் காயமாகி வலி தாங்காமல் அலறியிருக்கிறார். உயிர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமாளை அரிவாளை உயர்த்தி மிரட்டியதும், பதறிப் போன மருத்துவர், ‘இனி அந்தப் பக்கம் திரும்பமாட்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். 

 

அதனைத் தொடர்ந்து, ‘இனி தூத்துக்குடிப் பக்கமே நடமாடக் கூடாது. ஒன்னோட டிரஸ்களை எடுத்துக்கிட்டு மதுரைக்கே ஓடிப் போயிறு’ என மிரட்டியிருக்கிறாராம் இளையராஜா. அதன் பிறகே தன் சகாக்களை மருத்துவருடன் அனுப்பி அவரின் பகுதியில் கொண்டு சென்று விடச் சொல்லியிருக்கிறாராம். விடுதியில் மருத்துவரை இறக்கி விட்ட சகாக்கள் உடனடியாக அவரது உடைமைகளைப் பேக்கப் செய்து எடுத்து வர மிரட்ட, மருத்துவரும் அதன்படி தன்னுடைய லக்கேஜூடன் வர பின்னர் அவரை அப்படியே கொண்டு சென்ற அவர்கள், மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதோடு, பல கிலோ மீட்டர் தொலைவு பேருந்தை ஃபாலோ செய்திருக்கின்றனர்.


உடலில் காயங்களுடன் மதுரை வந்த முருகப்பெருமாள், வீட்டில் பெற்றோர்களிடம் எதையும் சொல்லாமல், தன் உயிர் நண்பனிடம் நடந்தவைகளைச் சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். அதிர்ந்து போன நண்பர் கொடுத்த தைரியத்தில், அவருடன் தூத்துக்குடி திரும்பிய முருகப்பெருமாள் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியிருக்கிறார். சிகிச்சையின் பொருட்டு வந்த மருத்துவ அதிகாரியிடம் தனக்கு ஏற்பட்டவைகளைத் தெரிவித்திருக்கிறார். அதன் பின் தொடர்புடைய தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் போக, மருத்துவமனையிலிருந்த மருத்துவர் முருகப் பெருமாளிடம் விசாரணை நடத்திய போலீசார் விஷயத்தை மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்க, அதன் பின் காவல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஒ.செ. இளையராஜாவும் அவரது சகாவான வானவராயன் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.


இது குறித்து நாம் மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரிடம் பேசிய போது, “ஆள் கடத்தல், மிரட்டல், ஆயுதம் கொண்டு தாக்கிய என 324, 506 (2) உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் இளையராஜா, அவருடன் இரண்டு பேர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இளையராஜா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவான அவரது டிரைவர் கோபால் தேடப்படுகிறார். இது தவிர, இளையராஜா மீது ஆறு பழைய வழக்குகளிருக்கின்றன. அவர்மீதான நில அபகரிப்புப் புகார் கலெக்டர் வசமிருக்கிறது” என்றார்.


சட்டம் தன் கடமையைச் செய்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.