Skip to main content

'தி கேரளா ஸ்டோரி' வலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

 

'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் சமகால நிகழ்வுகளுக்கு மாறான செய்திகளை வெளிப்படுத்துவதாக அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதனிடம் கடந்த மே 3 அன்று நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

 

அதேசமயத்தில் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அப்படத்தினை எதிர்க்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில், தமிழக அரசு இத்திரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி காலை 11 மணிக்கு மஜக சார்பில் திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் நடைபெற்ற இப்போராட்டக் களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, இக்களத்தில் சமூகநீதி அமைப்புகள்  மற்றும் ஃபாஸிஸ எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைவார்கள் என்றும் இது ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் என்றும் கூறினார். இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வுக்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் கட்டிமேடு ரஹ்மத்துல்லா தலைமை ஏற்று வழி நடத்தினார். இதில் திருத்துறைப்பூண்டி மஜக ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப், கத்தார் மண்டல நிர்வாகி ராவுத்தர், கிளை செயலாளர் அசாரூதீன், பைசல் அஹமது, முகமது பைசல், சாகுல்ஹமீது, மாலிக், ஷேக் முகமது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேசத் திரைப்பட விழா - ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிராக போரட்டம்

 

protest against  The Kerala Story screening in iffi

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல மொழி படங்கள் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டது. அந்த வகையில் சுதிப்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், மற்றும் ஓவியர் அர்ச்சனா ஆகியோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தை கேலி செய்யும் மீம்ஸ் மற்றும் படத்தில் கூறப்பட்ட பல விஷயங்களை மறுக்கும் தரவுகள் அடங்கிய ஆவணங்களையும் கையில் வைத்திருந்தனர்.

 

அதோடு இயக்குநர் சுதிப்தோ சென்னிடம், இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அவர், “நீங்கள் படம் பார்த்தீர்களா? படம் பார்க்காதவரை அதைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்”என்றார். இதனால் போரட்டதில் ஈடுபட்ட இருவரையும் பனாஜி போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் செல்போன்களையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்து, பின்பு 1 மணி நேரம் கழித்து விடுவித்தனர். 
 

 

 

Next Story

"எங்களை தண்டிக்க சதி" - தி கேரளா ஸ்டோரி இயக்குநர் புலம்பல்

 

The Kerala Story ott issue

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியது.

 

தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கலை சந்தித்து வருகிறது. அதில் ஒரு முன்னணி நிறுவனம், இப்படத்தின் கதைக்கரு மற்றும் ஏற்கனவே கிளப்பிய சர்ச்சை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி வாங்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இப்படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓடிடியில் வெளியாகாதது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "இப்படத்தை வெளியிட சரியான ஓடிடி தளம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். எங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரையுலகின் பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. அதனால் எங்களைத் தண்டிக்கத் திரையுலகம் சதி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்காக ஒரு பிரிவினர் வேலை செய்கிறார்கள் என எண்ணுகிறோம்" எனப் புலம்பியுள்ளார்.