Skip to main content

இல்லம் தேடி மருத்துவம்; கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்! 

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Karur Collector who inspected the villages!

 

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி லட்சுமனம்பட்டி, மேலப்பாளையம் ஊராட்சி, வடக்குபாளையம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; “தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக நோய் கண்டு அறியப்படுபவர்கள் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நோய்களின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு தீர்வும் காணப்படுகிறது.

 

Karur Collector who inspected the villages!

 

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 1,08,454 நபர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 79,877 நபர்களும், இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் 53,594 நபர்களும், இயன்முறை சிகிச்சை உள்ளவர்கள் 7,769 நபர்களும், ஆதரவு சிகிச்சை உள்ளவர்கள் 5,868 நபர்களும் பயன்பெற்று வருகிறார்கள். இப்பணிக்கு 101 இடைநிலை சுகாதார பணியாளர்களும், 194 பெண்சுகாதார பணியாளர்களும், 25 செவிலியர்களும் என மொத்தம் 320 பணியாளர்கள் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மேலும், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.  

 

Karur Collector who inspected the villages!

 

பின்னர் வடக்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் மரணங்களை தடுப்பதற்காக பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன் துணை சுகாதார நிலையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களின் குழந்தை வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியம் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், தைராய்டு, சத்துக் குறைபாடு, ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.