karnataka chief minister wrote a letter for tamilnadu chief minister for today

Advertisment

மேகதாது அணை தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று (03/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது. மேகதாது திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.