Skip to main content

ராங்காலில் ஏற்பட்ட தொடர்பு! குழந்தை உயிரை பறித்த கொடூர தாய்! 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Kanyakumari woman arrested in child case

 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியில் திருமணத்தை மீறிய உறவால், ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில் ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குளக்கச்சி பகுதியில் கொத்தனார் வேலை செய்யும் ஜெகதீஷ் (36) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சவிதா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


இந்த நிலையில் சவிதாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் செல்போன் ராங் கால் மூலம் மாராயபுரத்தைச் சேர்ந்த சுனில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி பழகியுள்ளனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது. மேலும், சுனில் மார்த்தாண்டம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் இருவரும் நேரடியாகவும் பேசி வந்துள்ளனர்.


இதில் சவிதா, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், பட்டப்படிப்பு படித்து முடித்து வீட்டில் இருப்பதால் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி சுனிலும் தீவிரமாக சவிதாவை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணமான இந்து பெண்கள் அடையாளமாக நெற்றி தலை முடி கீழ் பொட்டு வைப்பது வழக்கம். ஆனால் சவிதா, சுனிலிடம் வீடியோ காலில் பேசும் போதும் அவரை சந்திக்க செல்லும் போதும் அந்த பொட்டு வைக்கமாட்டாராம்.


இந்த நிலையில் சவிதா, சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போது சுனில் ஏதேச்சையாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது சவிதாவின் நெற்றி முடியின் கீழ் பொட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, ‘உனக்கு திருமணமாகி விட்டதா?’ என கேட்டுவிட்டு சுனில் கோபமாக சென்று விட்டாராம். அதன்பிறகு சுனிலுக்கு சவிதா போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை. அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சவிதா, சுனிலின் காய்கறி கடைக்கு சென்று அழுது புலம்பியுள்ளார்.


இனி மேலும் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் நீ எனக்கு வேணும். அதற்காக நான் எதையும் இழக்க தயாராக இருக்கிறேன் என கதறியுள்ளார். இதை கேட்ட சுனில் உன்னையும் எனக்கு மறக்க முடியவில்லை அப்படியென்றால் உன் கணவனையும் குழந்தைகளையும் விட்டுட்டு என்னுடன் வா என்றிருக்கிறார். அதற்கு சவிதா சரி என்று சம்மதித்து இருக்கிறார்.


இதையடுத்து சுனிலுடன் போக முடிவெடுத்த சவித்தா, நேற்று (6-ம் தேதி) மாலை இரண்டு குழந்தைகளுக்கும் உப்புமாவுடன் எலி விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார்.  இதில் கொஞ்ச நேரத்தில் இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது ஆண் குழந்தை வாயில் இருந்து நுரை தள்ளி மயக்கமடைந்துள்ளான். உடனே வேலைக்கு போன கணவர் ஜெகதீஷ்க்கு போன் செய்து குழந்தை திடீரென்று நுரை தள்ளி மயக்கமடைந்துவிட்டது என கூறியதால் ஜெகதீசும் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குழந்தையை தூக்கி கொண்டு தனியார் மருத்துவமனைக்கு போனார். அங்கு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால், பின்னர் குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.


அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இரவு முதல் குழந்தையான சஞ்சனாவும் மயக்கம் போட்டு விழுந்தது. அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


பின்னர் சவிதாவின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, சுனிலுடன் தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சவிதாவை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்த  காரணத்தையும், சுனிலுடன் இருந்த தொடர்பையும் கூறினார். இதையடுத்து போலீசார் சவிதாவையும் சுனிலையும் கைது செய்தனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.