Skip to main content

விமல் நடித்த ‘கன்னிராசி’ திரைப்படத்துக்கு இடைக்காலத்தடை!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

 

KANNIRASI FILM CHENNAI COURT ORDER

 

 

நடிகர் விமல் நடிப்பில் நேற்று (27-ஆம் தேதி) வெளியாக இருந்த 'கன்னிராசி' திரைப்படத்திற்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

 

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் 'கன்னிராசி’ கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

 

இதற்காக, படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப்போல, 2018- ஆம் ஆண்டுக்குள் படத்தை ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. 

 

இந்நிலையில், 'கன்னிராசி' திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது.

 

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக, தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வேறு நிறுவனம் மூலமாக படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடக்கோரி, 'மீடியா டைம்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னிராசி' திரைப்படம் வெளியாக இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'காக்கா முட்டை' இயக்குநர் வீட்டில் திருட்டு; கடிதத்துடன் வந்த தேசிய விருது

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
'kakka muttai' director's house burglarized; National award with letter

காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட நிலையில், இயக்குநருக்குத் திருடர்கள் கடிதம் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தேசிய விருது பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர்ப் பகுதியில் மணிகண்டன் வசித்து வருகிறார். அடுத்த திரைப்படப் பணிகளுக்காக கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் சென்னையில் தங்கியிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல மணிகண்டன் தன் படத்திற்காக வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'kakka muttai' director's house burglarized; National award with letter

இந்த நிலையில், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று இரண்டு வரிகள் எழுதப்பட்ட கடிதத்தையும் தேசிய விருதுக்கான பதக்கங்களையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டு கேட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். உசிலம்பட்டி காவல்துறையினர் அந்த கடிதத்தை கைப்பற்றிய தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.