Skip to main content

அக்கா-தங்கை 3 பேரும் போலீஸ்-வாழ்த்தி மகிழ்ந்த கனிமொழி

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Kanimozhi was happy to greet all 3 sisters and the police

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ஒரே சமயத்தில் போலீஸாக தேர்வாகியுள்ள சம்பவம் தமிழக காவல்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கேள்விப்பட்டு அந்த சகோதரிகளை தொடர்புகொண்டு வாழ்த்தி மகிந்திருக்கிறார் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழாவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்கள். கூலிவேலை பார்த்து வருகிறார் வெங்கடேசன். ஒவ்வொரு நாளும் கஷ்ட ஜீவனம் தான். அதேசமயம், மூன்று பெண் குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் வெங்கடேசன். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தனர்.

 

இந்தநிலையில், மூத்தமகள் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே 3 சகோதரிகளும் போலீசில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வினை நடத்தியது தமிழக அரசு. மூன்று பேரும் அந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மூவரும் தேர்வில் வெற்றிப் பெற்றார்கள். மூவரும் வெற்றிப் பெற்றதற்கே வெங்கடேசன் குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

 

தேர்வு பெற்ற சகோதரிகள் மூவரும் பொன்னேரியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். கடுமையான அனைத்து பயிற்சிகளையும் கற்று தேர்ந்தனர். நேற்று முன்தினம் இவர்களுக்கான பயற்சி முடிந்து சொந்த ஊருக்கு சென்றனர். அந்த கிராமமே திரண்டு வந்து 3 சகோதரிகளுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தினர்.

 

இதுகுறித்து பேசிய வெங்கடேசன், ‘’போலீசில் சேர வேண்டுமென்பது என் ஆசை. ஆனா, அடிப்படை படிப்பில் நான் சேரவில்லை. அதனால், காவல்ர் தேர்வினை என்னால் எழுத முடியாமல் போனது. என் ஆசை எனது மூன்று மகள்களும் இப்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். என் சந்தோசத்துக்கு அளவே இல்லை’’ என்று உற்சாகமாய் பேசுகிறார் வெங்கடேசன்.

 

இந்நிலையில், மூன்று சகோதரிகளும் ஒரே சமயத்தில் போலீஸ் காவலராக தேர்வு பெற்று தமிழக காவல்துறையில் இணைந்திருப்பதை கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, உடனே மூன்று சகோதரிகளில் ஒருவரான வைஷ்ணவியை தொடர்புகொண்டு, ‘’ ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறதம்மா. மூன்று பேரும் ஒரே சமயத்தில் போலீஸாக இருப்பது சாதாரண விசயமல்ல. போலீஸ் வேலை மீது உங்களுக்குள் இருக்கும் அர்ப்பணிப்புதான் உங்களை வெற்றிப்பெற வைத்திருக்கிறது. வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்’’ என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருக்கிறார் கனிமொழி. அவரது வாழ்த்தில் நெகிழ்ந்துபோன வைஷணவி, ‘’எங்களை வாழ்த்திய முதல் அரசியல் தலைவர் நீங்கள் தான்மா. உங்களிடம் பேசியதே எங்களுக்கு ஏதோ சாதித்து மாதிரி இருக்கு. தமிழக காவல்துறையில் நாங்கள் மூணு பேரும் கடுமையாக உழைத்து நல்லபெயரை எடுப்போம்’’ என்று மனம் திறந்து பேசியுள்ளார். கனிமொழியை தொடர்ந்து அந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடி இருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.