Skip to main content

நள்ளிரவில் பற்றியெரிந்த வீடு; தாத்தாவைக் காப்பாற்றப் போராடிய பேத்தி!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

An old man trapped in a burning roof house,Granddaughter who woke up

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது நாகல் குழி. இந்த ஊரைச் சேர்ந்தவர் 70 வயது பெரியான். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இவர் தனக்குத் துணையாக அவரது பத்து வயது பேத்தி நீரோஷாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு அவரது குடிசை வீட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

நடு இரவு ஒரு மணி அளவில் அவர்களது கூரை வீடு திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. தீயின் தாக்கத்தினால் திடுக்கிட்டு எழுந்த நிரோஷா தனது தாத்தாவை தீயிலிருந்து காப்பாற்றுவதற்காக எழுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லாத பெரியான், வீட்டிற்கு வெளியே வர முடியாமல் தடுமாறி உள்ளார். உடனே நிரோஷா தாத்தாவை வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவதற்கு, உதவி செய்வதற்காக பக்கத்துத் தெருவில் குடியிருந்த தனது பெற்றோர் வீட்டுக்கு ஓடி அவர்களிடம் தகவல் கூறி அழைத்து வந்துள்ளார்.

 

அதற்குள் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எரிந்த வீட்டில் முதியோர் பெரியாரின் உடலை சடலமாகக் கண்டெடுத்தனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர் பெரியான் தீயில் சிக்கி இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் முதியவர் பெரியானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் விசாரணையில் மின்கசிவு காரணமாக அந்த வீடு இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்த வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த பெரியவர் ஒருவர், தீயில் சிக்கி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.