Skip to main content

கலைஞர் கையெழுத்து ... கலெக்டர் உருக்கம்!

Published on 20/06/2021 | Edited on 20/06/2021

 

kalaingar Signature ... Collector Melting!

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து மாவட்டம் முழுக்க ஆய்வுப் பணியை செய்துவந்தார். இந்நிலையில் குளித்தலை பகுதியிலுளள ஒரு அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது 1959 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேரடியாக அவர் வந்து ஆய்வு செய்து அந்தப் பள்ளியின் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதை கண்டுபிடித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிகவும் நெகிழ்ந்து அந்தப் பதிவை வாட்ஸ்அப் மற்றும் செய்தியாளர்களிடம் இதை பகிர்ந்துள்ளார். 

 

தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி தொடங்கி அடுத்து திராவிட இயக்கம் என திமுக தேர்தல் பயணத்தை தொடங்கும் போது 1959இல் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற நிலையில், ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது எழுதிய குறிப்பு மிகவும் அரிதாக கிடைத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் இந்த பதிவின் மூலமாக தெரிவித்துள்ளார். 

 

kalaingar Signature ... Collector Melting!

 

இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நாம் கேட்டபோது, "எனக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பாக இந்த செய்தியை காணமுடிந்தது. அதேசமயம் சமூக நீதிக்காக சமத்துவத்திற்காக தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் பணியாற்றி இந்த சமூகத்தை உயர்த்துவதற்காக அவர்கள் பாடுபட்டதை எண்ணி நான் பெருமையாக கருதுகிறேன். கலைஞர் இந்த தொகுதியில் வெற்றிபெற்று அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை நான் பார்வையிட்டது என் வாழ்நாள் மகிழ்ச்சி. கலைஞர் எப்படி சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்தாரோ அதேபோல் நான் உறுதியாக மக்களுக்காக பணியாற்றுவேன்" என கூறினார். 

 

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் திறமையை அவருக்கு வருகிற கோரிக்கையின் அடிப்படையில் அவரின் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சமூகத்தினுடைய பின்புலம் அதனுடைய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எல்லாவற்றையும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கவனித்து ஒரு பாடமாக கொடுத்திருப்பது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.