Skip to main content

ஆலங்குடி அண்ணா சிலை அருகே கலைஞர் படம் அடக்கம்! தொண்டர்கள் அஞ்சலி!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
a

 

 திமுக தலைவர் கலைஞரின் மறைவு கட்சிகளை கடந்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அண்ணாவின் தம்பி கலைஞரின் உடலை அண்ணாவின் அருகில்  அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் கொடுக்க மறுத்ததால் பல்வேறு கட்சி தலைவர்களும் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றனர். திமுக வினர் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர். 

 

a


   கலைஞரின் வசனத்தில் பராசக்தியில் நீதிமன்றம் சென்ற வழக்கை  போல வித்தியாசமான வழக்காக உயர்நீதிமனறம் போனது மெரினாவில் கலைஞர் துயில இடம் கேட்ட வழக்கு. நீதியரசர் கடைசி நேரத்தில் அண்ணாவின் அருகி்ல் தம்பி துகில தடையில்லை என்று தடையை உடைத்தார். துயரத்திலும் பட்டாசு வெடித்தார்கள் உடன்பிறப்புகள்.

 

a

 

  இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில்  கீரமங்கலம் உள்ளிட்ட கிராமம் நகரம் என்று பந்தல் அமைத்து கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மாலை வரை காத்திருந்து ஊர்வலம் நடத்தினார்கள்.

 

a

 சிலட்டூர் கிராமத்தில் அப்பகுதி கிராம வழக்கப்படி கலைஞரின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை சட்டை கழட்டி இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு இரு கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க அஞ்சலி செலுத்த வந்த உறவுகள் கை கழுவி துயரத்தில் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தினார்கள். மாலையில் கலைஞரின் படத்துடன் ஊர்வலம் நடத்தி அண்ணா சிலை அருகே கலைஞர் படத்தை அடக்கம் செய்தனர். அண்ணாவின் தம்பிக்கு அண்ணா சிலை அருகே சிலை எழுப்புவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு களைந்து சென்றனர்.
   

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (வயது 91) காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இரா.சம்பந்தன் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

2015ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது’ என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு 13ஆவது முறையாகத் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தனும், ‘இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பிரியாணி கொடுக்க குப்பை வண்டியில் ஆட்களை அழைத்து வந்த மாநகராட்சி ஊழியர்கள்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Corporation employees who brought people in a garbage truck to give biryani

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளையும் பிரியாணியும் வழங்கினார்.

பிரியாணி வாங்குவதற்கு பெரிய அளவில் ஆட்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் மாநகர எம்.எல்.ஏ கார்த்தி, துணை மேயர் சுனில் ஏற்பாட்டில்  ஏரியாக்களில் இருந்து ஏழை மக்களை அழைத்துவந்தனர். அப்படி வந்தவர்களை வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டனர் மாநகராட்சி ஊழியர்கள். அரசு வாகனத்தில் அதுவும் குப்பை வண்டியில் பொதுமக்களை ஏற்றி வந்தது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது

Corporation employees who brought people in a garbage truck to give biryani

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் செல்லும் பொழுது பணம், பிரியாணி, வாட்டர் பாட்டில், சரக்கு எனத் தந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மக்களை அழைத்து வந்த இதே. நபர்கள். இப்போது ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு இப்படி குப்பை வண்டியில் ஏற்றி வருகிறார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.