Skip to main content

இருவேறு கொடூர வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

afasf

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் தனசேகர்(29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த (20.01.2019) அன்று அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தனசேகரை கைது செய்து கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.

 

அதில் தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நலவாழ்வு நிதி மூலமாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Judges who handed down action verdicts in two different cruel cases

 

இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன சரவணன்(29). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் படித்தபோது பி.எட் படித்த 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிரசன்ன சரவணன் காதலியுடன் நெருங்கிப் பழகினார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். எனினும் பிரசன்ன சரவணன் திருமணத்திற்கு மறுத்தார். அதையடுத்து பிரசன்ன சரவணனின் தந்தை பக்கிரி,  தாய் அமுதா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நியாயம் கேட்டனர்.

 

ஆனால் பிரசன்ன சரவணன் பெற்றோர், திருமணத்திற்கு வரதட்சணையாக 30 சவரன் நகை மற்றும் கார் கேட்டனர். இந்நிலையில் கடந்த 2017ல் அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் அவரை திருமணம் செய்ய பிரசன்ன சரவணன் மறுத்ததுடன் 'குழந்தை தனக்குப் பிறக்கவில்லை' எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் பிரசன்ன சரவணன்,  பக்கிரி, அமுதா ஆகியோரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பிறந்த குழந்தையின் தந்தை பிரசன்னா சரவணன் தான் என்பது மரபணு சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பாலகிருஷ்ணன்,  சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், பக்கிரி, அமுதா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.