Skip to main content

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி 

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Judges barrage of questions for the National Highways Department

 

தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டியன் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

 

இது தொடர்பான வழக்கு எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்தார். கடந்த 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தனர். அதே சமயம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச் சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்து விட்டுத் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு நாளாவது 50 சதவீத கட்டணத்தை வசூல் செய்துவிட்டு நீதிமன்றத்தை நாடுங்கள் என நெடுஞ்சாலைத்துறைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.’ மேலும் இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (29.09.2023) ஒத்தி வைத்தனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது” - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

“Encroachment of government lands on the rise” - High Court Madurai Branch

 

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு அதிகாரிகள் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்வால் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது.

 

ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சொத்துகளை ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். அதே சமயம் பொதுச் சொத்துகளைப் பாதுகாத்து மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை” எனத் தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மருத்துவ கழிவு; தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Madurai high court Appreciation for Tamil Govt Action

 

பிற மாநில மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் ஆய்வாளர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட கேரளாவில் இருந்து லாரி மூலம் தமிழ்நாட்டில் உள்ள குருவன்கோட்டையில் அந்த மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனை கண்ட அந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில், அந்த லாரியை பறிமுதல் செய்து உரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோம். இது தொடர்பான விசாரணை ஆலங்குளம் கீழமை நீதிமன்றத்திற்கு வந்த போது, பறிமுதல் செய்த லாரியை விடுவித்து உத்தரவிட்டது. இதனால், இது தொடர்பான வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது.

 

இது தொடர்பான விசாரணை இன்று (18-11-23) மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட போது, ‘அண்டை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ் போட சட்ட வழிவகை செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறியது. இதனையடுத்து, மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ‘விதிகளை மீறி மருத்துவ கழிவு கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்குவோரை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். 

 

சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக சட்டத்திருத்தம் கொண்டுவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்க விஷயம்” என்று தெரிவித்தது. மேலும், மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியை விடுவித்த ஆலங்குளம் கீழமை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்